முகத்துவாரம் தீவுக்கான போக்குவரத்து கடல் மார்க்கம் என்றபடியால் அக்கிராம மக்கள் படும் துன்பங்களோ ஏராலம்! அங்கிராமத்து மக்கள் படும் இன்னல்கள் தொடர்பாக இன்று மக்கள் சக்தி குழுவினர் நேரில் சென்று ஆராய்ந்தது.
எமது
SEDO Srilanka
நிறுவனத்தின் அழைப்பின் பேரில் வருகை தந்த சக்தி குழுவினரை முகத்துவாரம் அழைத்து சென்று மக்களின் பிரச்சனைகளை ஆராய்ந்திருந்தோம்.
குடிநீர் வசதியின்மை, மலசலக்கூடமின்மை, சுகாதார பிரச்சனை, பொருளாதார சிக்கல், எந்த தேவையாக இருந்தாலும் கல்பிட்டிக்கே செல்ல வேண்டும் என்ற நிர்ப்பந்தம்! என்ற அடிப்படை பிரச்சனைகளை தன்னகத்தே கொண்டிருக்கிறார்கள் முகத்துவார மக்கள்..
இவர்களின் பிரச்சனைகளுக்கு தீர்வாக இந்த மக்களின் ஒரே கோரிக்கை #பாலம்! இப்பிரதேசத்திற்கான போக்குவரத்து மார்க்கமான கடல் என்பதோடு படகு சேவை என்பதனாலும் அப்பிரதேச மக்கள் பல பிரச்சனைகளுக்கு முகம் கொடுப்பதாக தெறிவித்திருந்தார்கள்.
தீவிலிருந்து கரைக்கு சென்று மீண்டும் தீவிற்கு வர படகு சேவைக்கு 200/= வரை செலவாகுவதாகவும், கல்பிட்டி நகரிற்கு சென்று வர முச்சக்கர வண்டிக்கு 300/= வரை செலவாகுவதாகவும் அம் மக்கள் கூறியதோடு,
வைத்தியசாலைக்கு அவசரமாக செல்வதற்கான வேறு பாதைகள் இல்லை என்பதாகவும், இரவு நேரங்களில் படகு சேவை இல்லை, கட்பினி தாயையோ அல்லது விசம் தீண்டியே ஒருவரை வைத்தியசாலைக்கு அழைத்து செல்வதிலுள்ள சிக்கள் தொடர்பாகவும்,
பாடசாலைக்கு கல்பிட்டிக்கு செல்வதில் மாணவர்கள் ஏதிர்நோக்கும் பிரச்சனைகள், படகு உரிய நேரத்திற்கு செல்லாவிட்டால், பாடசாலைகளிலிருந்து திருப்பியனுப்பப்படும் சந்தர்பங்களோ ஏராலம், (அதனால் பலர் கல்வியை இடைநிறுத்தியும் உள்ளனர்)
மலசலக்கூட வசதிகள் பெரும்பாலான வீடுகளில் இல்லை, அவற்றை அமைக்க வேண்டுமானாலும் அதனை கடல் மார்க்கமான கொண்டு வருவதிலுள்ள சிக்கள்!,
அப்பிரதேச மீனவர்கள் படும் இன்னல்கள் தொடர்பாகவும் பல விடயங்களை அப்பிரதேச மக்கள் கூறியிருந்தார்கள்! (அப்பிரதேசத்தில் சுற்றுலா துறைக்கு முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறது ஆனால் அங்குள்ள ஏழை தொழிலாளிகள் புறகனிக்கபப்படுகிறார்கள்)
இன்றைய மக்கள் சந்திப்பு எனக்கு முகவும் பிரயோசனமளித்தது, சக்தி Tv மட்டும் இதற்கு முன்னாலும் இரு தடவைகள் முகத்துவார மக்களின் பிச்சனைகளை வெளி கொண்டு வந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
மேலும் தேர்தல் காலங்களில் இம்மக்களிடம் வாக்குறுதிகளை வழங்கி அவர்களின் வாக்குகளை பெற்ற அரசியல்வாதிகள் மீண்டும் ஒரு முறையாவது அந்த பிரதேசத்திற்கு சென்று வருமாறு கேட்டுக் கொள்வதோடு,
எமது அழைப்பின் பேரில் கல்பிட்டி பிரதேசத்திற்கு வருகைத்தந்த மக்கள் சக்தி குழாமிற்கும்
Chandran Aadhav
அண்ணாவுக்கும் நன்றிகளையும் தெறிவித்துக் கொள்கிறேன்.
0 Comments