அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுல்லாஹி வபரகாத்துஹ் நேற்று (2020/08/25) காலை எம் காதில் புகுந்த அன்புக்குரிய ஜெய்னுதீன் மரிக்கார் ஹழரத் அவர்களின் ஜனாஸாச் செய்தி எம்மை மிகக் கவலையில் ஆழ்த்தியது.
எமது கல்பிட்டி மஜ்லிசுல் உலமாவின் மூத்த பல உறுப்பினர்களில் ஒருவராக இருந்து எம்மோடு நல்ல பல சேவைகளில் பங்காற்றி வந்த நிலையில் திடீர் சுகவீனமுற்று கடந்த பல காலங்களாக மன்னாரில் தனது குடும்பத்துடன் வசித்து வந்த நிலையிலே இன்று இவ்வுலகை விட்டும் பிரிந்து விடைபெற்றுச் சென்றிருக்கிறார்.
அவர் எம்மோடு இருந்த காலங்களில் அவர் ஆற்றிய நற்சேவைகளை வல்லவன் அல்லாஹ் பொருந்திக் கொண்டு அவரின் மறுமை வாழ்வை செளிப்பாக்கி மேலான சுவனபதியிலே வசிக்கச் செய்யவேண்டும் எனவும் அவரைப் பிரிந்து வாழும் அவரின் குடும்பத்தினருக்கு மன ஆறுதலை வழங்க வேண்டுமெனவும் இருகரம் ஏந்திப் பிரார்த்திக்கிறோம்.
தலைவர்,
மஜ்லிசுல் உலமா,
கல்பிட்டி,
2020/08/26
0 Comments