சவுதி அரேபியாவில் வசிக்கும் வெளிநாட்டு பணியாளரின் வங்கி கணக்குகள்
முடக்கம் தொடர்பான புதுப்பிக்கப்பட்ட தகவல்களை சவுதி அரேபிய நாணய ஆணையம்
(SAMA) தெளிவுபடுத்தியுள்ளது. சவுதி அரேபியாவில் வசிக்கும்
வெளிநாட்டவர்களின் ஊதியத்தை விட நிதி பரிவர்த்தனை அதிகமாக இருந்தால் கணக்கு
முடக்கம் செய்யப்படும் என ஊடகங்களில் பரவிய வதந்திகளை சவுதி அரேபிய நாணய
ஆணையம் (சாமா) மறுத்துள்ளது. மேலும் விவரங்கள் கீழே:
சவுதி அரேபியா வெளிநாட்டவர்கள் வங்கி கணக்கு முடக்கம் புதுப்பிப்பு SAMA
நிதி நிறுவனங்கள் மற்றும் வங்கிகள் விதிகள் மற்றும் நடைமுறைகளின்படி
தொடர்ந்து செயல்படுகின்றன. சமூக ஊடகங்கள் மற்றும் வேறு சில ஊடக செய்தி
சேனல்களில் பரவிய வதந்திகளைப்போன்று பணப் பரிமாற்றத்தில் எந்த வித
மாற்றமும் இல்லை. இதுபோன்ற நடவடிக்கைகளுக்கு வங்கிகளுக்கு எந்த உத்தரவும்
பிறப்பிக்கப்படவில்லை என ஆணையம் மறுத்துள்ளது. மேலும், இந்த செய்திகள்
ஆதாரமற்றது எனவும் கூறியுள்ளது.
கொரானா வைரஸ் பரவலால் உலகப் பொருளாதாரத்தில் ஏற்பட்டுள்ள விளைவு காரணமாக, வெளிநாட்டு பணியாளர்கள் தங்களின் வேலை மற்றும் அதன் நிலைத்தன்மை குறித்து கவலைபடுவதன் விளைவாக இத்தகைய செய்திகள் பரவி வருகிறது.
0 Comments