சவூதி அரேபியாவில் சர்வதேச விமான சேவைகள் எந்த தேதியில் மீண்டும்
துவங்கப்படும் என இன்னும் முடிவு செய்யப்படவில்லை என சவூதி தலைமை விமானப்
போக்குவரத்து ஆணையம் (GACA) தெரிவித்திருக்கிறது.
ட்விட்டர் மூலமாக GACA இத்தகவலை தெரிவித்திருக்கிறது. அந்த
செய்தியில்,” சர்வதேச விமான சேவைகள் எந்த தேதியில் மீண்டும் துவங்கப்படும்
என இன்னும் முடிவு செய்யப்படவில்லை. இது சம்பந்தமாக சவூதி உயர்
அதிகாரிகளுடன் பேசி முடிவெடுக்கப்படும். புதுப்பிக்கப்பட்ட தகவல்களை
மக்கள், அதிகாரப்பூர்வ இடங்களில் இருந்து மட்டுமே பெறவேண்டும்” எனத்
தெரிவிக்கப்பட்டுள்ளது.
கொரோனா நோய்ப் பரவலைத் தடுக்க, மார்ச் மாத மத்தியில் இருந்து சர்வதேச
விமான இயக்கத்திற்குத் தடை விதித்தது சவூதி அரேபியா. அதுமுதல், கண்டிப்பான
ஊரடங்கு அமல்படுத்தப்பட்டதுடன் நகரங்களுக்கு இடையேயான போக்குவரத்து தடைகள்
தளர்த்தப்பட்டன. ஜூன் மாதத்தில் உள்நாட்டு விமான நிலையங்கள் மூலமாக 750,000
பயணிகள் பயணித்திருக்கிறார்கள்.
0 Comments