தனிமைப்படுத்தல் நிலையங்களிலோ அல்லது சுயதனிமைப்படுத்தலோ உள்ளவர்கள் சாதாரண தேர்தல் வாக்குச்சாவடிகளுக்கு வாக்களிக்க அனுமதிக்கப்படமாட்டார்கள் என்று தேர்தல்கள் ஆணைக்குழு தலைவர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார்
இந்தநிலையில் தனிமைப்படுத்தலில் உள்ளவர்களுக்காக நடமாடும் தேர்தல் வாக்குச்சாவடிகளை அமைப்பது தொடர்பிலும் ஆராயப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்தவிடயம் தொடர்பில் தேர்தல்கள் ஆணைக்குழு, சட்ட ரீதியான அங்கீகாரத்தை எதிர்ப்பார்ப்பதாக மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார்.
இதேவேளை தேர்தல்கள் ஆணைக்குழுவில் நேற்று இது தொடர்பான விடயங்கள் உதவி ஆணையாளர்கள் மற்றும் பிரதி ஆணையாளர்களுடன் பேசப்பட்டுள்ளதாக ஆணைக்குழுவின் தலைவர் தெரிவித்துள்ளார்.
0 Comments