கொரோனா வைரஸ் தொற்றாளர்கள் மீண்டும் அடையாளம் காணப்பட்டு வரும்
சூழ்நிலையில், நிலவும் சுகாதார காரணங்களால் கூட தேர்தல் கூட்டங்களை நிறுத்த
தயாரில்லை என ஐக்கிய மக்கள் சக்தி கூட்டணியின் கம்பஹா மாவட்ட வேட்பாளர்
விஜித் விஜயமுனி சொய்சா தெரிவித்துள்ளார்.
கொழும்பில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் இதனை கூறியுள்ளார்.
எமது
தேர்தல் பிரசாரங்களை நிறுத்த முடியாது. எங்களது வாய்களை மூட முடியாது.
அரசாங்கத்தின் மக்கள் விரோத செயல்களுக்கு எதிராக எங்களது மூச்சு உள்ளவரை
நாங்கள் எங்களது வாய்களை மூடாது அதற்கு எதிராக செயற்படுவோம். கொரோனா வைரஸை
விட ஆபத்தான பயணத்தை நோக்கி நாடு சென்றுக்கொண்டிருக்கின்றது.
கொரோனா வைரஸை விட ராஜபக்ச வைரஸ் படுமோசமானது. ராஜபக்ச வைரஸை தோற்கடிப்பதே எமது தரப்பின் தேவையாக உள்ளது.
கொரோனா
வைரஸ் தொற்றியவர் கொரோனா ஏற்பட்டு மரணமடைந்தார் என்றாலும் ஒட்டு மொத்த
மக்களையும் ராஜபக்ச என்ற மிகப் பெரிய வைரஸிடம் பழிக்கொடுக்க எங்களால்
முடியாது. உயிர் மூச்சு இருக்கும் வரை இந்த அரசாங்கத்திற்கு எதிராக
செயற்படுவோம் தனிமைப்படுத்தல் சட்டத்தை பின்பற்றி நாங்கள் எங்களது
கூட்டங்களை நடத்துவோம் எனவும் விஜித் விஜயமுனி சொய்சா குறிப்பிட்டுள்ளார்.
0 Comments