மக்களுடன் சிறந்த தொடர்புகள் இல்லை என்பதே தற்போது அரசியலுக்கு வரும்
நாடாளுமன்ற உறுப்பினர்களிடம் காணக்கூடிய மிகப் பெரிய பலவீனம் என ஐக்கிய
தேசியக் கட்சியின் தலைவரும் முன்னாள் பிரதமருமான ரணில் விக்ரமசிங்க
தெரிவித்துள்ளார்.
கொழும்பு சுகததாச விளையாட்டு அரங்கிற்கு அருகில்
நடைபெற்ற வீ.ஏ. சுகததாசவின் 47வது நினைவு தின நிகழ்வில் கலந்துக்கொண்டு
உரையாற்றும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.
தற்போதைய அரசியல்வாதிகள்
வாக்காளர்களுக்கு சேவை செய்வதற்கு பதிலாக ஊடகங்கள் முன்னிலையில்
நடிக்கின்றனர். இதனால், வாக்காளர்கள் நாடாளுமன்ற உறுப்பினர்களை
வெறுக்கின்றனர்.
அதேபோல் ஐக்கிய தேசியக் கட்சி எதிர்காலத்தில்
கட்சியின் அறிவு தர்மத்திற்கு அமைய ஜனநாயகத்தை செயற்படுத்துவது தொடர்பாக
யோசனையை கொண்டு வர நடவடிக்கை எடுக்கும் எனவும் ரணில் விக்ரமசிங்க
குறிப்பிட்டுள்ளார்.
0 Comments