Subscribe Us

header ads

தனது உயிருக்கு அச்சுறுத்தல் அருகாமையில் வேறு ஏதும் சிறைச்சாலைக்கு என்னை மாற்றுங்கள் கஞ்சிபான இம்ரான்


தற்போது பூஸ்ஸ சிறைச்சாலையில் உள்ள தன்னை தென் மாகாணத்திற்கு வெளியில் உள்ள வேறு ஏதாவது ஒரு சிறைச்சாலைக்கு மாற்றுமாரு சிறைச்சாலை அதிகாரிகளிக்கு உத்தரவிடுமாறு கோரி பாதாள உலக குழு தலைவரான மொஹமட் வசீம் மொஹமட் இம்ரான் எனும் கஞ்சிபானி இம்ரான் உயர்நீதிமன்றத்தில் மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளார். 

குறித்த மனுவின் பிரதிவாதிகளாக பதில் சிறைச்சாலைகள் ஆணையாளர் துஷார உப்புல்தெனிய, பூஸ்ஸ சிறைச்சாலை அதிகாரி, அமைச்சர் நிமல் சிறிபால த சில்வா ஆகிய ஒன்பது பேரின் பெயர் குறிப்பிடப்பட்டுள்ளது. 

தனது உயிருக்கு அச்சுறுத்தல் இருக்கும் காரணமாக தன்னால் பூஸ்ஸ சிறைச்சாலையில் இருக்க முடியாத நிலமை ஏற்பட்டுள்ளதாக அவர் குறித்த மனுவில் குறிப்பிட்டுள்ளார். 

இதனால் தன்னை தென் மாகாணத்திற்கு வெளியில் உள்ள வேறு ஏதாவது ஒரு சிறைச்சாலைக்கு மாற்றுமாரு உத்தரவிடுமாறு அவர் குறித்த மனுவில் குறிப்பிட்டுள்ளார்.    

Post a Comment

0 Comments