Subscribe Us

header ads

புத்தளத்திற்கு விஜயம் செய்த அதிமேகு ஜனாதிபதி கோத்த பாய


ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ஷ இன்று காலை மதுரங்குளி பகுதிக்கு மேற்பார்வை விஜயம் ஒன்றை மேற்கொண்டிருந்தார்.

ஜனாதிபதியின் இந்த விஜயத்தை முன்னிட்டு புத்தளம் - மதுரங்குளி பிரதேசத்தில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டிருந்ததுடன், விஷேட அதிரடிப்படையினர் மற்றும் பொலிஸார் இணைந்து பாதுகாப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டிருந்தனர்.

இதன்போது ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் புத்தளம் மாவட்ட வேட்பாளர் ஏ.எச்.எம்.ரியாஸின் ஏற்பாட்டில் மதுரங்குளி வாராந்த சந்தைக் கட்டடத் தொகுதியில் இடம்பெற்ற நிகழ்வில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் புத்தளம் மாவட்ட நாடாளுமன்ற வேட்பாளர்கள், உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்கள், பிரதேச, மாவட்ட அமைப்பாளர்கள் உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டனர்.

இந்த சந்தர்ப்பத்தில் மதுரங்குளி வாராந்த சந்தைக் கட்டடத்தில் ஒன்றுகூடியிருந்த மக்களையும், சமயத் தலைவர்களையும், வர்த்தகர்களையும் சந்தித்துக் கலந்துரையாடிய ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ஷ, அந்த மக்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளையும் கேட்டறிந்து கொண்டுள்ளார்.

ஜனாதிபதியை சந்தித்து கலந்துரையாடிய பொதுமக்களும், ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன ஆதரவாளர்களும் மகஜர்களை ஜனாதிபதியிடம் கையளித்துள்ளனர். 






Post a Comment

0 Comments