கொரோனா வைரஸ் பரவலுக்கு புகைப்பிடித்த மற்றும் போதைப் பொருள் பயன்பாடு அதிக பாதிப்பை ஏற்படுத்துவதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதன் காரணமாக மதுபான நிலையங்களை மூடுமாறு, புகையிலைகளை தடு செய்யுமாறு இலங்கை புகையிலை மற்றும் மதுபானம் மீதான தேசிய ஆணையத்தின் தலைவர் வைத்தியர் சமாதி ராஜபக்ஷ தெரிவித்ததுள்ளார்.
தனிமைப்படுத்தல் நிலையங்களில் உள்ள போதை பொருள் அடிமையானவர்களினால் இந்த விடயம் உறுதியாகியுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
ஆபத்தான போதை மருந்துகள், போதைப்பொருள் அல்லது புகையிலை காரணமாக ஏற்படும் மயக்க நிலையானது கொரோனா பரவலுக்கு பிரதான காரணமாகின்றதென அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
கொரோனா முதலாவது அலை பரவிய காலப்பகுதியில் ஒரே புகையிலையை 6 பேர் பயன்படுத்தியுள்ளனர். இதனால் பாரிய அளவு பரவல் ஒன்று ஏற்பட்டதன் செய்திகள் வெளியாகியிருந்தது.
கொரோனா கட்டுப்பாடுக்குள் வரும் வரை இவற்றினை தடை செய்ய வேண்டும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
0 Comments