கொரோனா கொடுமையானது மக்களே, சுய கட்டுப் பாட்டுடன் நடந்து கொள்ளுங்கள்.
இரண்டாவது அலை இலங்கையில் சமூகப்பரவலாகவே ஆரம்பிக்கும் அபாயம்!
சனநெரிசல் உள்ள இடங்கள் போக்குவரத்துகளை தவிருங்கள்.
ஆங்கில மருத்துவம் மாத்திரமல்ல சுதேச சித்த ஆயுர்வேத யூனானி மருத்துவ
மூலிகை வைத்திய தற்காப்பு முறைகள் உணவு மற்றும் ஊட்டச் சத்துக்களை
உட்கொள்ளும் முறைகளை அறிந்து கடைப்பிடியுங்கள்.
வீட்டில்
இருப்புக் கொள்ளாத இளைஞர்கள் யுவதிகளை கண்டிப்பாக அவதானியுங்கள், சிலவேளை
நோயெதிர்ப்பு சக்தி அதிகம் அவர்களுக்கு இருந்தாலும் வீட்டிலுள்ள
பெரியவர்கள் குழந்தைகள் நோயாளிகளுக்கு நோய்க் காவிகளாக அவர்கள்
மாறிவிடலாம்.
உங்கள் நண்பர், உறவினர் , நீங்கள் அதிகம் நேசிப்பவர்கள்,
மதிப்பவர்களாயினும் சமூக இடைவெளியைப் பேணுங்கள், அத்தியாவசியமற்ற
சந்திப்புகளை தவிர்த்துக் கொள்ளுங்கள்.
சுற்றுலாக்கள், பொது நீர்த் தடாகங்கள் அருவிகள் என்பவற்றைத் தவிர்த்துக் கொள்ளுங்கள்.
சன்மார்க்கம் தரும் சலுகைகளை விதிவிலக்குகளை கடைப்பிடிப்பது சுன்னத்து
மட்டுமல்ல கடமையுமாகலாம், மஸ்ஜித் நிர்வாகங்கள் கவனத்தில் கொள்ளுங்கள்
.
முழு அடைப்பு வருமுன் முன்ஆயத்தங்களுடன் இருந்து கொள்ளுங்கள்.
இனாமுல்லாஹ் மஸிஹுத்தீன்
0 Comments