பொதுத்தேர்தல் பிரச்சார நடவடிக்கைகளை கொரோனா கட்டுப்பாட்டு விதிமுறைகளின் கீழ் மேற்கொள்வதில் பல வேட்பாளர்கள் திண்டாடிவருகின்றனர்.
அத்துடன் கோரோனா பரவலை தடுப்பதற்காக பெரிய பொதுக்கூட்டங்கள் நடத்தக்கூடாது என்ற கட்டுப்பாடு உள்ளது.
இந் நிலையில், தனது பிரதேசத்தில் லிங்கநாதன் வித்தியாசமான உத்தியை கையாள்கிறார்.
அதாவது நெடுங்கேணி பகுதியிலுள்ள வர்த்தக நிலையமொன்றில் விற்கப்படும் குளர்பான வகைகள் உள்ளிட்ட பல உணவுப்பொதிகளில் தனது ஸ்டிக்கரை ஒட்டி விற்பனை செய்ய ஏற்பாடு செய்துள்ளார்.
இவ்வாறு குளிர்பான போத்தல்கள், மற்றும் பானங்களில் லிங்கநாதனின் படம் பொறித்த புகைப்படங்கள் சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது.
0 Comments