அஸிர் பகுதியில் உள்ள மஹயலில் (Mahayal) நேற்று (வெள்ளிக்கிழமை) இரவு ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த போலீசார் மண்டபம் ஒன்றில் அதிக எண்ணிக்கையிலான கார்கள் நிற்பதைக் கண்டு அங்கு சோதனை செய்தனர். விசாரணையில் கொரோனா வைரஸ் பரவுவதற்கு எதிரான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளின் ஒரு பகுதியாக அதிகாரிகள் நிர்ணயித்த கட்டுப்பாடுகளில் ஒன்றான திருமணம் போன்ற நிகழ்வுகளில் 50 நபர்களுக்கு மிகாமல் பங்கேற்க வேண்டும் என்ற வரைமுறையை மீறி அதிகமான எண்ணிக்கையில் மக்கள் இந்நிகழ்வில் கலந்து கொண்டது தெரியவந்தது.
போலீசாரை கண்டதும் அங்கிருந்தவர்கள் அந்த இடத்தை விட்டு வெளியேறினர் என்று ஒரு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதிகளவில் கூட்டம் சேர்ப்பது, கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கைகளை மீறுவது போன்ற செயல்களுக்கு 50,000 சவூதி ரியால் வரை அபராதமாக விதிக்கப்படும் என்ற கட்டுப்பாடுகள் நடைமுறையில் உள்ளது. அதுமட்டுமின்றி இத்தவறை மீண்டும் செய்தால் அபராதம் இரட்டிப்பாகும் என்று ஏற்கனவே சவூதி அரசு பொதுமக்களை எச்சரித்திருந்தது.
அதுமட்டுமின்றி, கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கைகளை மீறும் வணிக நிறுவனங்கள் மூன்று மாத கால பணிநிறுத்தத்தை எதிர்கொள்ளக்கூடும் என்றும் எச்சரித்திருந்தது.
கடந்த வாரம், சவூதி அதிகாரிகள் நாடு முழுவதும் ஒரு மாத கால ஊரடங்கு உத்தரவை முழுமையாக நீக்கிவிட்டு, இயல்பு வாழ்க்கைக்கு திரும்புவதற்கான திட்டத்தின் படி அனைத்து பொருளாதார நடவடிக்கைகளையும் மீண்டும் தொடங்க அனுமதியளிக்கப்பட்டது.
இருப்பினும், கொரோனா வைரஸை தடுக்கும் நடவடிக்கைகளின் ஒரு பகுதியாக சர்வதேச விமானப் பயணம், உம்ரா பயணங்கள் மற்றும் 50 க்கும் மேற்பட்ட நபர்கள் ஒன்று கூடுவது போன்ற தடைகள் தொடர்ந்து அமலில் உள்ளது.
நேற்றைய (வெள்ளிக்கிழமை) நிலவரப்படி மஹயலில் 36 நபர்கள் உட்பட, அஸிரில் மொத்தம் 542 பேர் புதிதாக கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்பதை சுகாதார அமைச்சகம் உறுதிப்படுத்தியது என்பது குறிப்பிடத்தக்கது.
Source: Gulf News
0 Comments