Subscribe Us

header ads

ஹஜ் கடமையினை நிறவேற்ற வெளிநாட்டு யாத்திரீகர்களுக்கு அனுமதியில்லை (மேலதிக தகவல் இணைப்பு)

கொரோனா வைரஸ் பரவல் காரணமாக 2020ஆம் ஆண்டுக்கான ஹஜ் கடமையினை மேற்கொள்ள வெளிநாட்டு யாத்திரீகர்களை அனுமதிப்பத்தில்லை என சவூதி அரேபிய அரசாங்கம் தீர்மானித்துள்ளது.
இது தொடர்பிலான உத்தியோகபூர்வ அறிவிப்பு நேற்று (22) திங்கட்கிழமை சவூதி அரேபியாவின் ஹஜ் மற்றும் உம்ரா விவகார அமைச்சினால் மேற்கொள்ளப்பட்டது.
இதேவேளை, சவூதி அரேபியாவில் வாழுகின்றவர் வௌ;வேறு நாடுகளைச் சேர்ந்தவர்களை மாத்திரம் ஹஜ் யாத்திரீகைக்கு அனுமதிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.
எனினும், வரையறுக்கப்பட்ட யாத்திரீகர்கள் மாத்திரமே இந்த வருடம் ஹஜ் கடமையினை நிறைவேற்ற அனுமதிக்கப்படவுள்ளனர். சவூதி அரேபியாவில் கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்தும் நோக்கிலேயே இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளiமை குறிப்பிடத்தக்கது.

Post a Comment

0 Comments