http://www.kalpitiyavoice.com/2020/06/6.html (part 6)
http://www.kalpitiyavoice.com/2020/06/7-123456.html (part 7)
மன்னனின் படைகள் தேவாலயத்தைத் தகர்த்தது டன் போரில் போர்த்துக்கேயரைத் தோற்கடிக்கின்றன. புத்தளத்தில் தனது ஆதிக்கத்தை நிலை நிறுத்த மன்னன் முயன்ற போது ம் பொத்துக் கேயாின் நடவடிக்கைகள் மன்னனுக்கு ப் பெரும் சவாலாகவே இருந்தன.
சிலாபம், புத்தளம், கல்பிட்டி, மன்னார் வரை கிறிஸ்தவ சமயத்தைப் பரப்ப பெரும் முயற்சி களில் ஈடுபட்டிருந்தனர். அதில் வெற்றி யும் கண்டனர். ஆனால் முஸ்லிம் களை மதமாற்றம் செய்வதில் அவர்கள் வெற்றி பெறவில்லை. சில சிறு சம்பவங்கள் நடந்து இருக்கலாம்.
போர்த்துக்கேயரின் தீவிர சமய மாற்ற நடவடிக்கைகள் இதில் சில தாக்கங்களைக் கொண்டு வருகிறது. முக்குவர் களும் கரையோர மீனவ சமூகத்தவர் களும் மதமாற்றப்பிரச்சினைக்கு அதிகம் முகம் கொடுத்தனர்.முன்னர் முஸ்லிம்களாக மதம் மாறிய முக்குவசமூகத்தில் ஒரு பிரிவினரும் கிறிஸ்தவ மதத்திற்கு மாறுகின்றனர்.
இந்த சிக்கல் அவ்வளவு வெளிப்படையானதாக இல்லை.
http://www.kalpitiyavoice.com/2020/06/7-123456.html (part 7)
புத்தளம் நகரில் தேவாலயம் கட்டப்பட்டு கிறிஸ்தவ மதமாற்ற முயற்சிகள் ஆரம்பமாகி யதும் கண்டி மன்னன் உஷார் அடைந்தான். போர்த்துகேயரின் நடவடிக்கை களால் ஆத்திரமடைந்த மன்னன் புத்தளம் நகரிற்கு த் தனது படைகளை அனுப்பி னான்.
மன்னனின் படைகள் தேவாலயத்தைத் தகர்த்தது டன் போரில் போர்த்துக்கேயரைத் தோற்கடிக்கின்றன. புத்தளத்தில் தனது ஆதிக்கத்தை நிலை நிறுத்த மன்னன் முயன்ற போது ம் பொத்துக் கேயாின் நடவடிக்கைகள் மன்னனுக்கு ப் பெரும் சவாலாகவே இருந்தன.
வர்த்தகத்தை க் கைப்பற்றுவதிலும் அதிகாரத்தை ப் பலப்படுத்துவதிலும் மட்டுமல்லாமல் கிறிஸ்தவ சமயத்தைப்பரப்புவதிலும் போர்த்துக்கேயர் தீவிர கொள்கை களைப் பயன் படுத்தி னர்.கிறிஸ்தவ த்தை ஏற்காத வர்கள் அறிவிலிகள், அநாகரிகமானவர்கள் என்று கருதினர். பள்ளிவாசல் களையும் கோயில்களையும் தகர்த்தனர் அல்லது தேவாலயங்களாக்கினர். முஸ்லிம்களுடன் தீராப்பகையுடன் நடந்து கொண்டனர்.
சிலாபம், புத்தளம், கல்பிட்டி, மன்னார் வரை கிறிஸ்தவ சமயத்தைப் பரப்ப பெரும் முயற்சி களில் ஈடுபட்டிருந்தனர். அதில் வெற்றி யும் கண்டனர். ஆனால் முஸ்லிம் களை மதமாற்றம் செய்வதில் அவர்கள் வெற்றி பெறவில்லை. சில சிறு சம்பவங்கள் நடந்து இருக்கலாம்.
ஒரு விஷயத்தை இங்கு நினைவு படுத்த வேண்டும் . 14ம் நூற்றாண்டில் அல்லது முன் ஒரு சந்தர்ப்பத்தில் இங்கு வாழ்ந்த தமிழர்களில் ஒரு பிரிவினர் குதிரை மலைத்துறைமுகத்தில் கப்பல்களில் வந்திருந்த அரபு வணிகர்களிடம் பெற்று க் கொண்ட உதவி க்கான பிரதி உபகாரமாக அல்லது நல்லெண்ணத்தின் காரணமாக அந்தப் பிரிவைச் சேர்ந்த வர்களில் ஒரு குழு வினர் அல்லது அனைவரும் இஸ்லாம் சமயத்தைத் தழுவியதாக ஒரு மரபு வரலாற்று ச் செய்தி வழங்கி வருகிறது. முக்குவர் குலத்தினைச் சேர்ந்த வர்களில் ஒரு கணிசமான பிரிவினர் இப்பிரதேசத்தில் இஸ்லாம் சமயத்தை ஏற்றுக் கொண்ட உண்மை சரித்திரத்தின் சில கூறுகளை யே இப் பவ்ராணிகக் கதைகள் நமக்கு உணர்த்துகின்றன.
முக்குவக் குலத்தினரின் பல்வேறு பண்பாட்டு அம்சங்கள் இப்பிரதேசத்தின் பல இடங்களில் சுவறி இருப்பதைப் பற்றி M.D. ராகவன் மானுடவியல் பார்வை யில் பல விஷயங்களைக் கூறி உள்ளார். சைமன் காசிச் செட்டி யின் எழுத்துக்களிலும் இது பற்றிப் பேசப்படுகிறது.
போர்த்துக்கேயரின் தீவிர சமய மாற்ற நடவடிக்கைகள் இதில் சில தாக்கங்களைக் கொண்டு வருகிறது. முக்குவர் களும் கரையோர மீனவ சமூகத்தவர் களும் மதமாற்றப்பிரச்சினைக்கு அதிகம் முகம் கொடுத்தனர்.முன்னர் முஸ்லிம்களாக மதம் மாறிய முக்குவசமூகத்தில் ஒரு பிரிவினரும் கிறிஸ்தவ மதத்திற்கு மாறுகின்றனர்.
இந்த சிக்கல் அவ்வளவு வெளிப்படையானதாக இல்லை.
1980 அளவில் புத்தளம் நகரின்ஒய்வுபெற்ற நகரபிதா ( Urban Council Chairman) காதர் அவர்களைச் சந்தித்த சந்தர்ப்பங்களில் மாம்புரி, தளுவ , நரக்கள்ளி மற்றும் அவற்றை அண்மித்த கிறிஸ்தவ கிராம மக்களின் சிலரது பரம்பரைப் பெயர் வரிசைகளில் ( அவர் களின் முன்னோர்கள் பட்டியலில்) முஸ்லிம் பெயர்கள் இருப்பதை நான் அவதானித்துள்ளேன் . அவற்றை ஒழுங்கு படுத்தி ஒரு பெயர்ப் பட்டியல் தயார்படுத்தி வைத்து ள்ளேன். அதை உங்களுக்கு த்தான் தரவேண்டும் என்றார். அது ஒரு மகிழ்ச்சியான செய்தி தான். அவரை அதன் பின் சந்திக்கும் சந்தர்ப்பம் கிடைக்கவில்லை. அவர் காலமான செய்தி கிடைத்தது.
சில மாதங்களுக்கு முன்னர் நண்பர் ஸனீருடன் வரலாற்றுத் தகவல்களைத் தேடி நாவல் காடு( நாவக் காடு ) சென்றேன்( புத்தளம் நகரில் இருந்து சுமார் 10மைல் தூரம்). ஹிந்து மக்கள் வாழும் பிரதேச த்திற்குள் சென்றோம் . புத்தளம் கடல் ஏரி க்கும் இந்து சுதந்திரத்திற்கு ம் இடையே இருக்கும் பண்டைய தமிழ் கிராமம் நாவல் காடு .
கண்டி மன்னர்கள் புத்தளம் - கல்பிட்டிப்பிரதேசத்தில் தமது ஆதிக்கத்தை பிரபலப்படுத்தவும் நீர் வெட்டு என்ற பண்டைய அரச சடங்கு ஒன்றை நிறை வேற்றவும் நாவல் காடு கிராமத்துக்கு வரும் வழக்கம் ஒன்று இருந்தது. அந்த வழக்கத்திற்கு ஆதரவு தந்து கண்டி மன்னனின் அதிகாரபூர்வ முகவராகச் செயல்பட்டவரின் வீட்டிற்கு செல்லுவது எமது நோக்கம் (தொடரும்). -msm anes-
0 Comments