உயிர்த்த ஞாயிறு தாக்குதல்களின் முக்கியதாரி சஹ்ரான் ஹாசிமினால்
புத்தளத்தில் உள்ள மதக்கல்வியகம் ஒன்றுக்கு 24 மாணவர்கள் அனுப்பப்பட்டதாக
குற்றப்புலனாய்வுத்துறையினர் கொழும்பு கோட்டை நீதிவான் நீதிமன்றதில்
அறிக்கை சமர்ப்பித்துள்ளனர்.
விசாரணைகளில் இருந்து இந்த விடயங்கள் தெரியவந்துள்ளதாக குற்றப்புலனாய்வுத்துறையினர் மன்றில் அறிவித்தனர்.
இந்தநிலையில்
கைது செய்யப்பட்டுள்ள சட்டத்தரணி ஹிஜாஸ் ஹிஸ்புல்லாஹ்விடம் தொடர்ந்தும்
விசாரணை நடத்தி வருவதாக மன்றுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.
சட்டத்தரணி
ஹிஸ்புல்லாஹ்வை தலைவராக கொண்ட புத்தளத்தில் அமைந்துள்ள மதக்கல்வியகம்
ஒன்றுக்கே குறித்த 24 மாணவர்களும் அனுப்பப்பட்டிருந்ததாக
குற்றப்புலனாய்வுதுறையினர் தெரிவித்துள்ளனர்.
இந்த நிலையில் சட்டத்தரணி ஹிஸ்புல்லாவே இந்த 24 மாணவர்களில் 10 பேருக்கு விரிவுரைகளை நடத்தியுள்ளார்.
சட்டத்தரணி
ஹிஸ்புல்லாவின் உடையது என்று நம்பப்படும் 7 தொலைபேசி இலக்கங்கள் 9
கையடக்கத் தொலைபேசிகளை மையப்படுத்தி விசாரணைகள் இடம்பெற்றுள்ளன.
இதில்
ஒரு சிறுவன் வழங்கிய வாக்குமூலத்தின் படி அவர்களுக்கு விமானக்குண்டு
வீச்சுகள் மற்றும் இறந்தோர் தொடர்பாக காணொளிகள் காண்பிக்கப்பட்டுள்ளதாக
குற்றப்புலனாய்வு துறையினர் மன்றில் தெரிவித்துள்ளனர்.
இதேவேளை
மற்றும் ஒரு மாணவன் வழங்கிய வாக்குமூலத்தின் படி சட்டத்தரணி ஹிஸ்புல்லாஹ்
தமக்கு விரிவுரை நடத்தியதாகவும், இஸ்ரேலில் கிறிஷ்தவர்கள் இஸ்லாமியர்களின்
பள்ளிவாசல்களை கட்டுப்படுத்தி வைத்துள்ளமையால் இலங்கையில் கிறிஸ்தவர்கள்
மீது தாக்குதல் நடத்துவதே ஒரேவழி என்று இதன்போது குறிப்பிட்டதாகவும்
குற்றப்புலனாய்வுத்துறையினர் தெரிவித்துள்ளனர்.
0 Comments