அமெரிக்காவுக்கும் ஈரானுக்குமிடையில் மோதல் ஏற்படும் நிலைமை உருவாகி ஈராக்கிலுள்ள அமெரிக்க படைத் தளங்கள் மீது ஈரான் தாக்குதல் நடத்தியுள்ள நிலையிலும் உக்ரேய்ன் விமானமொன்று ஈரானில் திடீரென விபத்துக்குள்ளான பின்னணியிலும் ஈரான் – ஈராக் வான்பரப்பில் தமது விமானங்களை பறக்கவிடுவதில்லையென சர்வதேச விமான நிறுவனங்கள் பல தீர்மானித்துள்ளன .
அதேவேளை ஸ்ரீலங்கன் விமான சேவையும் தனது லண்டன் – கொழும்புக்கிடையிலான விமானத்தை மேற்படி வான்பரப்பில் நடத்தாதிருக்க தீர்மானித்துள்ளது.
இதற்கிடையில் ஈராக்கிலுள்ள அமெரிக்கத் தளங்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதலில் அமெரிக்கத் தீவிரவாதிகள் 30 பேர் கொல்லப்பட்டதாக ஈரான் அறிவித்துள்ளது.
0 Comments