இலங்கையில் உள்ள சகல மதரசாக்களையும் முஸ்லிம் மத அலுவல்கள் திணைக்களத்தில் பதிவு செய்வது அவசியமென, பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
அத்துடன் குறித்த மதரசாக்களில் கற்பிக்கப்படும் பாடத்திட்டங்கள் குறித்து, சரியான முறையைக் கையாளுமாறும் திணைக்கள அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார்.
மேலும் மதரசாக்களில் கற்பிக்க வேண்டிய பாடத்திட்டங்கள் குறித்து, கல்வி அமைச்சும் முஸ்லிம் விவகார அமைச்சும் இணைந்து சரியான பாடத்திட்டத்தை பரிந்துரைக்குமாறும் பிரதமர் உத்தரவிட்டுள்ளார்.
0 Comments