அமெரிக்காவின் ஜனாதிபதி டொனல்ட் டிரம்பின் வீட்டின் அருகே ஆயுதங்களுடன் நடமாடிய ஈரானை சேர்ந்த ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவித்துள்ளன.
அமெரிக்காவின் புளோரிடாவில் உள்ள பிராட்லி பார்க் என்ற இடத்தில் அமெரிக்க ஜனாதிபதி டிரம்புக்குச் சொந்தமான சொகுசு வீடு ஒன்று காணப்படுகின்றது. இந்த வீட்டின் அருகில் கத்தி உள்ளிட்ட ஆயுதங்களுடன் நடமாடிய மர்மநபரையே பொலிஸார் கைது செய்துள்ளனர்.
பிடிபட்டவர் ஈரானை சேர்ந்தவர் எனவும், அவர் அமெரிக்காவில் தங்கி இருந்துள்ளமையும் ஆரம்ப கட்ட விசாரணைகளின் போது தெரியவந்துள்ளதாக கூறப்படுகின்றது. குறித்த சந்தேக நபரிடம் மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருவதாகவும் சர்வதேச செய்திகள் குறிப்பிட்டுள்ளன.
கடந்த சில மாதங்களுக்கு முன்னர் டிரம்ப் கலந்துகொண்ட குழுக் கூட்டமொன்றில் தக்பீர் ஓசையொன்றைக் கேட்டு டிரம்ப் பதறியடித்த சம்பவத்தை யாரும் மறந்திருக்க மாட்டார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
0 Comments