Subscribe Us

header ads

அமெரிக்க அதிபர் ட்ரம்ப் அந்தர் பல்ட்டி - நோ மோர் வோர்



நேற்று புதன்கிழமை காலை (அதாவது இலங்கை நேரப்படி புதன்கிழமை இரவு) தூங்கி எழும் டிரம்ப் பல்துலக்காமல் குளிக்காமல் பைபிள் கூட வாசிக்காமல் யுத்த அறிவிப்பு செய்வார் என எதிர்பார்க்கபட்ட நிலையில் அவர் சம்பிரதாயத்துக்கு வந்து பரீட்சையில் பெயிலான மாணவன் போல முகத்தை வைத்து கொண்டு ஏதோ சம்பிரதாயத்துக்கு பேசிவிட்டு யுத்தம் இல்லை என சொல்லிவிட்டார்

ஆம் ஈரானும் அமெரிக்காவும் யுத்ததை விரும்பவில்லை அதே நேரம் சும்மா இருக்கவும் விரும்பவில்லை

அந்த சுலைமானி இல்லையென்றால் சிரியா, ஏமன், பாலஸ்தீன், இராக்கிய ஷியா தீவிரவாதிகளின் பலம் குறையும் எனதிட்டமிட்ட அமெரிக்கா அவரை மட்டும் தூக்கிவிட்டு அமைதியாகிவிட்டது

ஈரானும் பதிலுக்கு தாக்குதல் நடத்தி 80 பேரை கொன்றதாக சொன்னாலும் விஷயம் உறுதிபடுத்தபடவில்லை , நிச்சயம் தாக்கியிருகின்றார்கள் சேதம் உண்டு ஆனால் அமெரிக்கா சொல்லாது

எனினும் அமெரிக்க முகாம்களை சதாம் காலத்துக்கு பின்புதுணிச்சலாக தாக்கியதில் தனித்து நிற்கின்றது ஈரான்

அமெரிக்கா யுத்தம் தொடங்காமல் தயங்க ஏகபட்ட காரணம் உண்டு, முதல் காரணம் யுத்தம் ஒரே நாளில் முடியாது 7 கோடிபேர் கொண்ட ஈரானில் குழப்பம் ஏற்படும், மனுகுல நெருக்கடி என உலகம் சொல்லி ரஷ்ய தலையீடு வந்துவிடும்யுத்தம் தொடங்கினால் இந்தபக்கம் சவுதியினையும் அப்பக்கம் குவைத் இன்னொரு பக்கம் ஐக்கிய அரபு அமீரகம் என யாரையும் ஈரான் சும்மா விடாது, அந்நாடுகள் கடுமையாக பாதிக்கபடும்

அவை அமெரிக்காவின் காலை பிடித்து அழுவது ஒருபுறம்

யுத்தம் என வந்தால் இஸ்ரேலும் உள்ளே வரும், சவுதி நிலை சிக்கலாகும்தெற்கு பக்கம் ஏமன் போராளிகள் கை ஓங்கும், ஹெஸ்புல்லாக்கள் சிரியாவில் இருக்கும் அமெரிக்க துருப்புக்களை கட்டம் கட்டி அடிப்பார்கள் , சிரிய எல்லையில் துருக்கி உள்ளே வரும்

ஏகபட்ட சிக்கல்கள் இருப்பதால் ஒழுங்காக எண்ணெய் எடுபப்தே உச்சிதம், ஈரான் மேல் கூடுதல் தடை விதித்தால் போதும்என்ற முடிவுக்கு வந்துவிட்டது அமெரிக்கா

இன்னொரு மகா முக்கிய விஷயம் அமெரிக்க காங்கிரஸ் சபையின் கடிவாளம், அமெரிக்க சட்டபடி வெளியில் இருந்து அமெரிக்கா மேல் தொடுக்கபடும் யுத்தத்துக்கு அதாவது அமெரிக்க மண்ணில் எதிரி கால்வைக்க முயன்றால் மட்டுமே அதிபர் யுத்த அறிவிப்பு செய்யமுடியும்அமெரிக்கா அந்நிய மண்ணில் யுத்தம் தொடுக்க அமெரிக்க காங்கிரஸ் அனுமதி தேவை

ஏற்கனவே ஈராக்கில் பேரழிவு ஆயுதம் உண்டு என சொல்லி காங்கிரஸ் ஆதரவை பெற்று அமெரிக்க தலமை சறுக்கியதால் காங்கிரஸ் கடும் அப்செட்

சிரியாவில் ஐஎஸ் படைகளை ஒழிக்க மட்டும் அனுமதி வழங்கியதுஅப்படிபட்ட அமெரிக்க காங்கிரஸ் சுலைமானியின் கொலை முறையற்றது என்றும் ஈரானால் அமெரிக்காவுக்கு அச்சுறுத்தல் இல்லா நிலையில் யுத்தம் செய்ய அவசியமில்லை என உறுதியான முடிவில் இருக்கின்றது

டிரம்புக்கு மகா கோபம், ஆனால் கோபத்தை டிவிட்டரில் கூட காட்டமுடியவில்லை அவரின் அட்மின் அவசரவிடுமுறையில் சென்றுவிட்டார் போல‌

ஆக 4 நாட்களாக கூடிய யுத்தமேகம் கலைந்துவிட்டதில் உலகுக்கு பெருத்த நிம்மதி

அதே வரியில்தான் முடிக்க முடியும், யுத்தத்தை அமெரிக்காவும் ஈரானும் விரும்பவில்லை. அது பெரும் சிக்கலுக்கு இரு நாட்டையும் இழுத்து அரேபியாவில் குழப்பம் மிகுந்து,இந்த சுந்தர்,சி படங்களில் வரும் கிளைமேக்ஸ் சண்டை போல யார் யாரை அடிக்கின்றார்கள் என தெரியா நிலைக்கு இட்டு செல்லும்

அதே நேரம் இருநாடுகளும் சும்மாவும் இருக்காது

இனி அடிக்கடி உரசுவார்கள், ஆங்காங்கே சின்னதாக முட்டுசந்து சண்டை போட்டு ஊமை குத்து குத்துவார்கள்

அத்தோடு திரும்பி சென்றுவிடுவார்கள்

உலகின் அமைதியும் நிலைத்தன்மையும் தொடர்வதில் எல்லோருக்கும் மகிழ்ச்சி, இந்த அமைதி நிலைக்கட்டும்

ஈராக், ஈரானிய மக்களும் அமெரிக்க மக்களை போல அமைதியில் வாழட்டும்.

-P.Gowsikan-

Post a Comment

0 Comments