மதிப்பிற்குரிய அரசியல் தலைமைகளே.
நேற்றிரவு 40 containers களில் குப்பைகளை கொண்டுவந்து நீரில் மிதக்கும் அருவாக்காலுவில் தட்டிச் சென்றிருக்கிறார்கள்...!
இப்போது இன்னும் 30 வந்துகொண்டிருக்கிறது...!!
அவர்கள் சொன்ன விஞ்ஞானம், அவர்கள் சொன்ன railway track, அவர்கள் சொன்ன compress / compact transfer station, அவர்கள் சொன்ன சுகாதாரம், நாற்றம்வராத இடையூறற்ற முறையிலான transport என்ற, குறைந்தபட்ச மனிதநேயம் கூட பொய்த்துப்போன கேவலம் உங்கள் கண்முன்னால் நடந்தேறிக்கொண்டிருக்கிறது... !
சுற்றுப்புற சூழல் அதிகாரசபையால் பெயரளவில் வழங்கப்பட்ட EIA report இன் நிபந்தனைகளைக்கூட காலால் மிதித்துக்கொண்டு,இந்த அநியாயம் உங்களைத் தலைவர்களாய் தெரிவுசெய்த மக்களுக்கு செய்யப்பட்டுக்கொண்டிருக்கி றது...!
கட்சிவேறுபாடுகள் இன்றி புத்தளம் பிராந்தியத்திற்கான எல்லா அரசியல் தலைமைகளும் எங்கள் கண்முன்னே தெரிகின்றீர்கள்..!
உங்களை ஹீரோக்களாக நினைத்து நாம் வாக்களித்த நாள் ஞாபகத்திற்கு வருகிறது..!
மேடைப்பேச்சுகளும் அதிலே நீங்கள் தந்த தலைமைத்துவ நம்பிக்கைகளும் இன்று-இப்போது-இந்த நிமிஷம் கண்வழியே கசிகிறது...!
இயல்பிலேயே நீங்கள் திறமைசாலிகள், ஆழமாக சிந்திக்கக்கூடியவர்கள், அதிகமான மக்கள் மனங்களில் எதோ ஒருவகையில் நம்பி விரும்பப்படுபவர்கள்... இறைவன் உங்களுக்கு வழங்கிய அருள்கள் ஏராளம்...!
அதனால்தான் மக்கள் உங்களை தெரிவுசெய்தார்கள்...!
இன்று அவர்களின் கரங்கள் கட்டப்பட்டு கழுத்து நெறிக்கப்படும் அவசரகால குப்பைவீதியில் உங்களை கண்ணீரோடு தேடுகிறார்கள்...!
மக்களுக்கும் குப்பைக்கும் இடையில் மதில்களாய் நிற்கவேண்டிய மக்கள் பிரதிநிதிகள் எங்கே என்று கேட்கிறார்கள்...!
யார் தடுத்தாலும் நான் நிறுத்துவேன் என்று ஒரு குரல் கேட்காதா?,
'அடுத்தவர்கள் எதைச்செய்யலாம்' என்ற குறைகூறும் அரசியலை விட்டுவிட்டு..., 'நான் இதைச்செய்கிறேன்' என்று உயர்ந்த மொழிபேச உங்களில் ஒருவன்கூட இல்லையா...?
ஒரே திசையில் எல்லோரும் எழுந்து நின்று, "நிறுத்து" என்றொரு இடி குரலையேனும் இலங்கைக்கு சொல்லமாட்டீர்களா..?
என்று ஏங்கித்தவிக்கிறார்கள்...!
சகோதரர்களே... ஊரே சாவுவீடாய் இருக்கும்போது..
ஒவ்வொரு tipper ரும் எங்கள் கழுத்தை மிதித்து கடந்து சென்றுகொண்டிருக்கும்போது.. .
உங்கள் மௌனம் மரணத்தைப்போல் வலிக்கிறது...!
இது நீங்கள் மிகவும் தேவைப்படும் நேரம்...!
உங்கள் அறிவு, அனுபவம், ஆற்றல், நுணுக்கம், பதவி, அரசியல் ஆகிய அனைத்து அமானிதங்களும் குப்பையை நிறுத்த பிரயோகிக்கப்படவேண்டிய நேரம்...!
'இப்போது இல்லையென்றால் இனி நீங்கள் எப்போதும் தேவையில்லை...!'
என மக்கள் முடிவுக்கு வரும் நேரம்...!
இதுவரை இந்தப்போராட்டத்தில்...
உங்களில் பலர் பார்வையாளர்கள்..! சிலர் விஷ விழுங்கிகள்...! இன்னும் பலர் இல்லாமல் போனவர்கள்...!
இந்த வட்டத்தை தாண்டி ஏதேனும் செய்யமுனையும் ஒரு நல்லாத்மாவாக எழுந்து நில்லுங்கள்..!!
எரிக்காமல் இருப்பதட்கு நெருப்பென்று சொல்வதில்லை...!!
பார்வையாளராக இருப்பதற்கு பதவிகள் தேவையில்லை...!
எதிர்பார்ப்புகளோடு..
--------
14-08-2019
0 Comments