வந்தவர்களை ஏற்றுக் கொண்ட பாவத்துக்காய் வருபவைகளையும் ஏற்கத்தான் வேண்டுமோ?
எதுதான் வரவில்லை வாராதவை ஏதுமுன்டோ?
அடங்காத மகனையும் கூட்டாளிகளையும் அப்பன் அள்ளி ஏற்றி அனுப்பியதும் இந்தப் பக்கம்தானே?
எத்தளத்திலும் இல்லாத பெரும் புதை குளி புத்தளத்தில் தானே உள்ளது ?
ஏற்றி ஏற்றி அனுப்புவார் பேரூர்திகள் வழிய வழிய வாய்க் கொழுப்பு சீலையால் வடிந்த கதை தெரியுமோ?
புழுத்துப் போன கழிவிலிருந்து கெட்ட நிர் சொட்டுச் செட்டாய்ச் சொட்டி நாறுமாம் பூருவாக்கள் பட்டித் தொட்டிகள் தோறும் பதறியடித்து ரெண்டு தலைவனும் ஓடோடி வருவானென அடிமைப் பயல் ஏமாந்து நிற்பானாம் தியாகத் தலைவனோ மண் சண்டைக்குத் கச்சை கட்டுவானாம் கிழக்கில் கழுதைகள் நிரை நிரையாய் உப்பு மண்ணில் முடைநாற்றம் பொறுக்காமல் மூக்குப் பொத்தி நிற்குமாம். கண் கலங்கி.
-Newton Isaac-
0 Comments