சிங்கப்பூர் பிரித்தானிய காலனியாக இருந்த காலம். பெளத்தர்கள், முஸ்லிம்கள், சீனர்கள் மாலாயர்கள், கிறிஸ்தவர்கள் என்று மதத்தாலும் நம்பிக்கையிலும் இனத்தாலும் வேறுபட்ட மக்கள் வாழ்ந்து கொண்டிருந்தார்கள்.
நாட்டை அபிவிருத்திப் பாதையில் இட்டுச் செல்ல வேண்டுமாயின் இனங்களுக்கிடையிலான புரிந்துணர்வு அவசியம் என்பதை சிங்கப்பூரின் ஸ்தாபகத் தந்தைகள் உணர்ந்திருந்தார்கள். இதனை அடிப்படையாகக் கொண்டு 1949ல் உருவாக்கப்பட்ட அமைப்பே Inter Religious Organisation (Singapore) Youth Group என்ற சமய ஒன்றுமை இயக்கமாகும்.
இந்த அமைப்பில் இன்று இலட்சக்கக்கான இளைஞர்கள் அங்கம் வகிக்கிறார்கள். மதங்களுக்கிடையிலான தொடர்ப்புகள் பற்றிய மாநாடுகளை தேசிய சர்வதேச மட்டத்தில் நடத்திவருகின்றன. புரிந்துணர்வின அடிப்படையில் சந்தேகங்களை நீக்கும் Mechanismத்தை உருவாக்கியிருக்கிறார்கள். அதனால் தான் Hate speeches எனப்படும் வெறுப்பூட்டும் பேச்சுக்கள் தடைசெய்யப்பட்டிருக்கின்றன. மதங்களை நிந்திப்பது தண்டணைக்குரிய குற்றமாகும். இவ்வாறு வெறுப்பூட்டும் வகையில் உரையாற்றிய இந்திய அறிஞர் ஒருவரும் சில வருடங்களுக்கு முன்னர் சிங்கப்பூரில் இருந்து வெளியேற்றப்பட்ட சம்பவம் நினைவில் இருக்கும்
Inter Religious Organisation (Singapore) அமைப்பை உருவா்குவதில் முன்னோடியாக நின்று செயற்பட்டவர் மௌலானா அப்துல் அலீம் சித்தீகி அவர்கள். மௌலானா சித்தீக்கி 20ம் நூற்றாண்டில் தோன்றிய சர்வதேச அங்கீகாரம் பெற்ற சிந்தனையாளர். ஒப்பீட்டு மத ஆய்வு துறையில் ஆழமான பாண்டித்தியம் பெற்றிருந்தார். ஆங்கில மகாகவி "ஜார்ஜ் பெர்னாட் ஷா" Sir George Bernard Shaw உடன் இஸ்லாம் பற்றிய அவர்கள் நடத்திய கலந்துரையாடல் இன்றளவும் பாராட்டிப் பேசப்படுகிறது. இரண்டாம் உலக மகா யுத்தம் முடிவடைந்து சில ஆண்டுகளில் Inter Religious Organisation (Singapore) அமைப்பை ஆரம்பிக்கும் நிகழ்வில் மௌலானா அப்துல் அலீம் சித்தீகி இவ்வாறு உரையாற்றினார்.
If it was ever necessary to create harmony among leaders and followers of different religions, it is more necessary and more urgent today when the world is living in fear of Third World War. With this very idea the Inter-Religious Organisation was founded”
– His Eminence Maulana Abdul Aleem Siddiqui, Founder of IRo, 1949
இவ்வாறான சமயத் தலைமைத்துவத்தின் மூலமே சிங்கபூரில் இன்று எமக்கும் முன்மாதிரியாக் திகழ்கிறது. நாட்டை முன்னேற்ற வேண்டும் என்ற தேவை அரசியல், சமயத் தலைவர்களுக்கு இருந்தது. ஆனால் இதற்கு மாற்றமாக பல்வேறு கசப்பான சம்பவங்களை நாம் எமது நாட்டில் கண்டிருக்கின்றோம்.
Comparative Religion என்படும் ஒப்பீட்டு மதயியலை அறிந்தவர் டாக்டர் சாகிர் நாயிக் என்று இன்றும் ஒரு கூட்டம் நம்பிக்கொண்டிருக்கிறது. சமயங்களுக்கிடையிலான ஒற்றுமையில் அவர் ஏற்படுத்திய சேதம் மிகவும் அதிகம். இதைத்தான் சில நான்கெழுத்து இயக்கஙகள் மேடைபோட்டு இங்கும் செய்துகொண்டிருந்தன. இவற்றான செயற்பாடுகளால் ஏற்படும் விளைவுகள் மிகவும் பயங்கரமானவையாகும்.
இன்று போய் அவர்களின் சபையில் அமர்ந்துகொள்வதன் மூலம் நாளை நல்லிணக்கம் ஏற்படும் என்ற முட்டாள் தனமான நம்பிக்கையின் வெளிப்பாடுகளையே இன்று அவதானிக்கின்றோம்.
0 Comments