சட்டவிரோத மதுபான உற்பத்தி, விநியோகம் தொடர்பில் அறிவிப்பதற்கு கலால் திணைக்களம் அவசர தொலைபேசி இலக்கமொன்றை அறிமுகம் செய்துள்ளது.
1913 எனும் இந்த அவசர தொலைபேசி இலக்கம் நாளை (19) முதல் செயற்படவுள்ளதாகவும் திணைக்களம் தெரிவித்துள்ளது.
24 மணி நேரமும் சேவையில் உள்ள இந்த இலக்கத்துக்கு பொது மக்களினால் வழங்கப்படும் தகவல்களின் இரகசியத் தன்மை பேணப்படும் எனவும் திணைக்களம் உத்தரவாதம் வழங்கியுள்ளது.
0 Comments