Subscribe Us

header ads

மக்களை நிர்க்கதியாக்கி தமக்கு தேவையானதை நிறைவேற்றிக் கொள்ளும் கொடூர அரசியல்.


1. ப்ளூமெண்டல் குப்பை மலை நிறைந்துள்ளது> மக்கள் எதிர்ப்பு தெரிவிக்கின்றனர்.
2. நீதிமன்றத்தில் 4 ஏக்கர்கள் மீதொட்டமுல்லைக்கு வழங்குகிறார்கள் > இறுதியில் 20 ஏக்கர்களுக்கு கொண்டு செல்கிறார்கள்.
3. மக்கள் எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்கள் செய்கிறார்கள் > கண்ணீர் புகை மற்றும் பொல்லடிகளால் தாக்குதல்.
4. இதற்கிடையில் 2007 முதல் குப்பைக்கான சிறந்த தீர்வுகள் கிடைக்கின்றன. ப்ளூமெண்டல் உள்ளடங்களாக மீள்சுழற்சி மற்றும் குப்பைகளிலிருந்து மின் உற்பத்தி செய்தல்.
5. இதற்கிடையில் கரதியானவிலும் (பொல்கொட ஈரநிலத்திலும்) குப்பை கொட்ட ஆரம்பிக்கிறார்கள்.
6. 2000ம் ஆண்டிலிருந்து தத்தமது உள்ளூராட்சி மன்றங்கள் மூலம் குப்பை பிரச்சினைகளை தீர்த்து கொள்ள வேண்டும் என்பதாகவும், குப்பைகளை வேறு வேறாக பிரித்தே பெற்றுக்கொண்டு அதன் மூலம் தொழில் வாய்ப்புக்களை உருவாக்க வேண்டும் என்பதாகவும் கொள்கைகளை அமைக்கிறார்கள்.
7. 90களில் இருந்தே இலங்கையில் சிறப்பாக குப்பைகளை முகாமைத்துவம் செய்து சர்வதேச விருதுகளை வென்ற உள்ளூராட்சி மன்றங்கள் உள்ளன.
8. EOI 2014ம் ஆண்டு குப்பைகளை முகாமைத்துவம் செய்ய முதலீட்டாளர்களை அழைக்கிறது. 60க்கும் மேற்பட்ட திட்டங்களுடன் வெளிநாட்டு முதலீட்டாளர்கள் வருகிறார்கள்.
9. அதற்கிடையில் முதலீட்டாளர்களின் திட்ட அறிக்கைகள் "குப்பை மாபியா"விற்குள் புகுந்து காணாமல் போகிறது.
10. அதிலே பெரும்பான்மையானவை BOO basisல் வந்தவை. அதாவது அவர்களது செலவிலேயே தொழில்நுட்ப கருவிகளை கொண்டு வந்து, தொழிற்சாலைகளை அமைத்து குப்பைகளை மீள்சுழற்சி செய்தல். எங்களுக்கு எந்த வித முதலீடும் செய்ய தேவையில்லை. நாட்டுக்கு செலவே இல்லாதது.
11. எப்படியோ அதுவும் தடைபட்டு இல்லாமல் போகிறது. இறுதியாக அருவக்காலு திட்டம் கொண்டுவரப்படுகிறது. அது யானைகள் வாழும் காட்டுப்பகுதி என்பதால் வனஜீவராசி திணைக்களத்தின் எதிர்ப்பினால் அதுவும் நிறுத்தப்படுகிறது.
12. அதன் பின் மீதொட்டமுல்லை சரிந்து விழுகிறது. 40 பேர் இறக்கிறார்கள். எல்லோரும் முதலைக்கண்ணீரில் மூழ்கிறார்கள்.
13. இப்பொழுது மீண்டும் மீதொட்டமுல்லையில் குப்பை போட முடியாததால் மேல் மாகாணத்தின் பெறுமதிமிக்க ஈரவலயங்களான கரதியானவிலும் முதுராஜவலையிலும் போட ஆரம்பிக்கிறார்கள்.
14. முதுராஜவல பிரதேச மக்கள் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்கிறார்கள். நீதிமன்றம் குப்பை கொட்டுவதை தடை செய்கிறது.
15. நாட்டின் உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பை தூசுக்கிற்கு கூட மதியாமல் தொடர்ந்து முதுராஜவலையிலேயே குப்பையை தட்டுகிறார்கள்.
16. அதற்கிடையில் மீதொட்டமுல்லை மக்கள் இறந்ததற்கு பின் தற்போதைய அரசாங்கம் அருவக்காலுவை "சேரக்குழியில்" ஆரம்பிக்கிறார்கள். (கொழும்பில் இருந்து 170Km அப்பால்)
17. அங்கு பழைய இடத்தை காட்டிலும் அதிக பிரச்சினை. அங்கு வாழும் சிங்கள மீனவர்கள் அதை எதிர்த்தார்கள்... எதிர்க்கிறார்கள்... அழகான கலப்பு... ஆம் அழகான பெரிய கலப்பு... அந்த பக்கம் கல்பிட்டி. இப்பொழுது வனஜீவராசி பிரச்சினைகளுக்கு பதிலாக இது சமூகப்பிரச்சினையாக மாறுகிறது. இலங்கையின் மிகப்பெரிய நிலத்தடி நீர்வளம் பற்றிய பிரச்சினை அது.
18. ஆனால் மீடியாக்களில் காட்டுவது முஸ்லிம் மக்கள் மட்டுமே குப்பை கொண்டுவருவதை எதிர்க்கிறார்கள் என்பதாகவே... அது உண்மையல்ல உதாரணமாக கிறிஸ்தவ மக்களின் நீர்கொழும்பு முதல் சேரக்குழி வரையான போராட்டத்தை சொல்லலாம்...
19. அதை தொடர்ந்து ஈஸ்டர் தாக்குதல் வருகிறது. சேரக்குழியில் ஆயுதங்கள் கண்டுபிடிக்கப்பட்டதால் தான் புத்தள மக்கள் எதிர்க்கிறார்கள் என்று சம்பிக்க கூறுகின்றார். (வனாத்தவில்லுவை சேரக்குழிக்கு கொண்டு வந்துவிட்டார். சந்தர்ப்பத்தை பயன்படுத்தி கபரயை உடும்பாய் மாற்றிய கதை).
20. மறந்துவிட்டோம்... இதே சம்பிக்க மீதொட்டமுல்லை சரிந்து விழுந்தவுடன் பெரிதாய் பம்மாட்டு காட்டியவாறு, 2019 வரும் போது குப்பை மூலம் மின்சாரம் தயாரிப்பதற்கான இரண்டு ப்ளாண்ட்களை அடித்து முடித்து இந்த குப்பை பிரச்சினையை முடிவுக்கு கொண்டுவருவதாக கூறியதை.
21. மேலே சொன்ன இரண்டு ப்ளாண்டுகளும் எங்கே சென்றது?, யாருடைய பணம்? 2014ல் வந்த ப்ரொஜக்ட்களுடன் கொஞ்சம் ஒப்பிட்டு பார்த்துக்கொள்ளுங்கள்.
22. குப்பைகளால் இப்பொழுது முதுராஜவல ஹெமில்டன் கால்வாயும், கரதியான பொல்கொடவும் அழுக்காக்கப்பட்டாயிற்று.
23. அருவக்காலுவை செய்து முடிக்க முன்னரே ஏப்ரலில் குப்பை தட்ட முயற்சிக்கிறார்கள்.
24. அருவக்காலு டெண்டரில் மோசடி. உலக வங்கியும் ஒதுங்கிக்கொள்கிறது.
25. அருவக்காலுவில் திட்டத்தை ஆரம்பித்ததில் இருந்து முறையற்ற விதத்தில் தான் வேலைகளை செய்கிறார்கள். இன்னமும் குப்பைகளை பிரித்து வேறுபடுத்தும் களனி ப்ளாண்ட்டை கட்டி முடிக்கவில்லை, புகையிரதப்பாதைகள் மற்றும் இன்னும் பல விடயங்களும் செய்யப்பட இல்லை.
26. இதற்கிடையில் இந்த திட்டத்தினால் ஏற்படும் சூழல் மற்றும் சமூக பிரச்சினைகளுக்கு எதிராக மக்கள் நீதிமன்றத்திற்கு செல்கிறார்கள்.
27. அத்துடன் திடீரென்று பெரு நகர அபிவிருத்தி அமைச்சு தமது குப்பை தட்டும் இடங்கள் நிரைந்துள்ளதாகவும், குப்பைகளை ஏற்றுக்கொள்ள முடியாது எனவும் அறிவிக்கிறார்கள். இப்பொழுது செக் மேட் நிலை. இறுதியில் அருவக்காலுவில் தட்ட சொல்கிறார்கள்.
இப்பொழுது உங்களுக்கு மின்சார நெருக்கடி மற்றும் அனல் மின்நிலையத்தை நினைத்து ஒப்பிட்டு பார்த்துக் கொள்ளலாம். (இந்த நாட்டில் நடைபெறும் நுணுக்கமான சதிகளை பற்றி தெரிந்திருந்தால்)
Land filling (குப்பை தட்டுதல் இல்லையென்றால் குப்பையை மண்ணுக்குள் தட்டுதல்) என்பது குப்பை பிரச்சினைக்கான மிகவும் மோசமான தீர்வு என்பதை நினைவில் நிறுத்திக்கொள்ளுங்கள். குப்பைக்கான அடுத்த மோசமான தீர்வு Sanitary Land Filling (சுகாதார முறையில் குப்பைகளை தட்டுதல் அல்லது மிகவும் சிறந்த முறையில் குப்பைகளை புதைத்தல்)
சிறந்த முறை எதுவென்று தெரியாவிடின் இலகுவாய் தேடி பார்க்கலாம்.
எப்படி டிகிரி மூளை??

Sinhala :‐ Jayantha Wijesingha
Tamil :- Muadh Malik

Post a Comment

0 Comments