Subscribe Us

header ads

கற்பிட்டி விபத்தில் 6 வயது சிறுமி உயிரிழப்பு


கற்பிட்டி அம்மாதோட்டம் 31 வது கட்டை பிரதேசத்தில் கடந்த புதன்கிழமை (14) இடம்பெற்ற வீதி விபத்தில் 6 வயது சிறுமி உயிரிழந்துள்ளதாக கற்பிட்டி பொலிஸார் தெரிவித்தனர்.

பள்ளிவாசல்துறை, முசல்பிட்டியைச் சேர்ந்த பாத்திமா றுஸ்னா ( வயது 6) எனும் சிறுமியே இவ்விபத்தில் உயிரிழந்துள்ளார்.(இவர் கல்பிட்டி சின்னக்குடியிருப்பு அஹமதுமீன் அவருடைய பேத்தி பிள்ளை)

கற்பிட்டி பகுதியை நோக்கிச் சென்று கொண்டிருந்த மோட்டார் சைக்கிள் ஒன்று வேகக் கட்டுப்பாட்டை இழந்து, வீதியோரத்தில் பயணித்துக் கொண்டிருந்த குறித்த சிறுமி மற்றும் சிறுமியின் சிறிய தாய் மீது மோதியதில் விபத்து

ச் சம்பவம் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டனர்.

விபத்தில் படுகாயமடைந்த குறித்த சிறுமியும், சிறிய தாயும் மற்றும் மோட்டார் சைக்கிளை செலுத்திச் சென்ற நபரும் அங்கிருந்தவர்களால் கற்பிட்டி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர், சிறுமி சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாக பொலிஸார் ௯றினர்.

அத்துடன், விபத்தில் காயமடைந்த பெண்ணும், மோட்டார் சைக்கிளை செலுத்திச் சென்ற நபரும் மேலதிக சிகிச்சைக்காக புத்தளம் தள வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளனர்.

புத்தளம் மற்றும் கற்பிட்டி பகுதிகளுக்குப் பொறுப்பான திடீர் மரண விசாரணை அதிகாரி பதுர்தீன் முஹம்மது ஹிசாம் மரண விசாரணைகளை நடத்தினார்.

விபத்துச் சம்பவம் தொடர்பில் கற்பிட்டி பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

-ரஸீன் ரஸ்மின்

Post a Comment

0 Comments