Subscribe Us

header ads

40 வருட கல்வி சேவையிலிருந்து ஓய்வு பெறும் மட்/மம/ஓட்டமாவடி தேசிய பாடசாலையின் முன்னாள் அதிபர் மதிப்பிற்குரிய திரு.MLA.ஜுனைட் சேர்

1978 ஆம் ஆண்டு தனது 19வது வயதில் ஆசிரியர் சேவையில் இணைந்த எம் ஆசான் இன்றுடன் 40 வருட கல்விச் சேவையிலிருந்து ஓய்வு பெறுகின்றார்.
1978.11.02 இல் ஆசிரியராக சேவையில் இணைந்த எம் ஆசான் அதிபராக உயர்வு பெற்று 23 வருடங்கள் அதிபர் சேவையில் இணைந்து ஓட்டமாவடி ஹிஜ்ரா வித்தியாலயத்தில் 13 வருடங்களும்,ஓட்டமாவடி மத்திய கல்லூரி(தேசிய பாடசாலை) 10 வருடங்களும் சேவையாற்றினார்கள். தனது காலப்பகுதியில் குறித்த இரு பாடசாலைகளின் பல அடைவுகளுக்கம், சாதனைகளுக்கும் உந்துசக்தியாக காணப்பட்டார்கள் என்பதனை அவ்விரு பாடசாலைகளிலும் கற்ற மாணவர்கள் என்ற வகையில் குறிப்பிட்டாக வேண்டும்.
2017 கல்வி நிர்வாக சேவையில் (SLEAS) இணைந்து பிரதிக்கல்வி பணிப்பாளராகவும் குறிப்பிட்ட சில காலம் பதில் கல்விப் பணிப்பாளராகவும் கடமை புரிந்த எம் ஆசான் 2019 ஆகஸ்ட் 26ம் திகதியுடன் தனது நான்கு தசப்த கல்வி சேவையிலிருந்து ஓய்வு பெறுகிறார்கள்.
அல்லாஹ் இவரது அனைத்து சேவைகளையும் பொருந்திக் கொள்வானாக.

Post a Comment

0 Comments