கல்விக்காக அதிக முதலீடுகளை இடுவதற்கு தனது அரசாங்கம் நடவடிக்கை எடுக்கும் என ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன ஜனாதிபதி வேட்பாளர் கோட்டாபய ராஜபக்ஸ தெரிவித்துள்ளார்.
கொழும்பு தாமரைத் தடாக அரங்கில் ஶ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் இளைஞர் அணி இன்று (24) பிற்பகல் ஏற்பாடு செய்திருந்த மாநாட்டில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கையில் அவர் இதனைக் கூறியுள்ளார்.
அறிவு ஞானத்தை முதன்மைப்படுத்திய நூற்றாண்டாக 21 ஆம் நூற்றாண்டு காணப்படுகின்றது. இதனால், எமது அரசாங்கத்தின் கீழ் முதல் இரண்டு ஆண்டுகளில் ஒரு பெரிய முதலீட்டைக் கல்விக்காக செய்வதற்கு எதிர்பார்த்துள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
பல்கலைக்கழகங்களின் வசதிகளை அதிகரிக்கவும், தொழில்நுட்பக் கல்வியை விரிவுபடுத்தவும், நாட்டிலுள்ள பல்கலைக்கழகங்களை ஆசியாவில் உள்ள சிறந்த பல்கலைக்கழகங்களாக மேம்படுத்தவும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அவர் கூறியுள்ளார்.
கல்விக்காக நீண்டகால தேசியக் கொள்கை வகுக்கப்பட வேண்டும் எனவும், வேலைவாய்ப்புக்கு ஏற்ற இளைஞர்களை உருவாக்க கல்வி முறைமை உருவாக்கப்பட வேண்டும் எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
0 Comments