இன்று வெளிநாட்டுச்செனல்களை தொலைக்காட்சியில் காண்பதென்றால் டிஷ் இணைப்புகளோ, கேப்ள் இணைப்புகளோ இன்றியமையாதவை.
டிஷ்களை பாவிப்பவர்களுக்கு இப்போதைக்கு எப்பிரச்சினைகளுமில்லை. கேபிள் கனெக்ஷன் பெற்றிருப்பவர்களுக்குத்தான் பெரும்பிரச்சினையொன்று காத்திருக்கிறது.
என்னவென்றால், கேபிள் கனெக்ஷன் பெற்றுக்கொள்பவர்களுக்கெல்லாம் இலங்கை மின்சார சபைக்குச்சொந்தமான மின்கம்பங்களில் கேபிள்களை இணைத்தே இணைப்பு வழங்கப்பட்டுள்ளன.
இத்தனை நாள் இதுவிடயத்தில் கண்டும் காணாமலுமிருந்த மின்சார சபை இன்று விழித்துக்கொண்டுள்ளது. விளைவு, நேற்று இபுனு பதூதா வீதியில் இவ்வாறு இ.மி.ச.யின் மின்கம்பங்களில் சுற்றப்பட்டிருந்த கேபிள் கனெக்ஷனுக்கான வயர்கள் இ.போ.ச.வினால் உத்தியேகபூர்வமாக வெட்டி எடுக்கப்பட்டுள்ளன.
ஏன், இ.மி.ச. அவ்வாறு செய்கிறது? அவர்களின் அனுமதிபெற்று தானே எமக்கு அதற்குச்சொந்தமான மின்கம்பத்தினூட இணைப்புகள் வழங்கப்பட்டன என்று கேட்டால், அதே கேள்விதான் எனக்கும் எழுந்தது.
ஆனால், கேபிள் இணைப்பை வழங்கியவர்கள் அவ்வாறான பொய்த்தகவலொன்றை வாடிக்கையாளர்களுக்கூறியே இணைப்புக்களை வழங்கியுள்ளனர். இ.மி.ச. இன் பொறியியலாளரிடமிருந்து இதனை உறுதிப்படுத்தமுடியுமாயிருந்தது.
கீழே இணைக்கப்பட்டுள்ள படங்களும் அவ்வாறான இ.மி.ச.இன் அனுமதியின்றி பொருத்தப்பட்ட கேபிள் இணைப்புக்களுக்கான வயர் தொடர்களே! இதுவும் அவர் மூலமே சுட்டிக்காட்டப்பட்டது.
எனவே, இவ்வாறு கேபிள் இணைப்பைப்பெற்றவர் இ.மி.ச. குழுவினரால் கேபிள்கள் வெட்டப்படும்போது அவர்களுடன் சண்டையிடாமல், இணைப்பை வழங்கியவர்களிடம் நிலைமையை விசாரித்து உங்கள் பிரச்சினைகளை சரிசெய்ய முற்படுங்கள்.
ஆஷிக் யூஸுப்
0 Comments