Subscribe Us

header ads

பொருளாதாரத் தடையில் சகோதரத் தடயம் - (சிங்கள மொழிக் கட்டுரையின் தமிழாக்கம்)


வாரச் சந்தைகளை முஸ்லிம் வர்த்தகர்களுக்குத் தடை செய்தும், வைத்தியசாலைகளில் மக்கள் நலன்சார் நற்பணிகளை மூடியும், வியாபாரங்களை பகிஷ்கரித்தும், முஸ்லிம் மாணவர்களை சிங்களப் பாடசாலைகளில் இருந்து துரத்தியும் நாம் மிகவும் வேகமாக முஸ்லிம்களை பொருந்பான்மை சமூகத்திலிருந்து வௌியேற்றிக் கொண்டிருக்கின்றோம்.

தற்போது 'பbய் சிங்களவர்' (ராஜபக்ஷைகளின் அல்லக்கைகளைக் குறிக்கும் நையாண்டிச் சொல்) நினைப்பது என்னவோ இந்த நாட்டு முஸ்லிம்கள் தோல்வியை ஏற்றுக்கொண்டு இலங்கையில் இருந்து அராபியாவுக்குத் தொலைந்து போய்விடுவார்கள் என்று.

ஆனால், உண்மையில் நடைபெறவிருப்பது தமிழனிடம் வாங்கித் திண்டதை விட பெரிய பருப்பு ஒன்று சிங்களவருக்குக் கிடைப்பதுதான்.

இவ்வாறானதொரு நிலை வளருவதற்கு இடங்கொடுத்து பார்த்துக்கொண்டிருப்பது, தோல்வியடைந்த அரசாங்கம் மட்டும்தான். ஏப்ரல் 21 சம்பத்துக்கான பின்புலம் தயாராகுவது முதல் இன்றுவரை இந்த விடயத்தில் அரசாங்கம் தோல்வியடைந்துள்ளது.

அன்மைய வரலாற்றில் தென் இலங்கையை ஒழுங்காக கட்டுப்பாட்டுக்குள் வைத்திருந்தவர்கள் சந்திரிக்கா-ரத்வத்தே (பாதுகாப்பு அமைச்சர்) கூட்டணிதான். ஒரு தீக்குச்சியினால் இனவாத தீயை மூட்டக்கூடிய இராணுவத் தோல்விகளுக்கு மத்தியில் கூட அவர்கள் தென்னிலங்கையில் இனவாதம் மூட்டப்படாமல் தக்கவைத்துக்கொண்டார்கள்.

அன்று ரத்வத்தே பகிரங்கமாகக் கூறினார் - தெற்கில் அப்பாவி தமிழருக்கு எதிராக தீவிரவாதத்தை மூட்ட முயற்சிப்போரைப் பிடித்து இரண்டு வார (இராணுவ)ப் பயிற்சியைக் கொடுத்து வடக்குக்கு அனுப்புவேன் என்று. தெற்கின் சண்டியர்கள் வாலை சுருட்டிக்கொண்டார்கள்.

சிரிசேனவைப் பேசி பயனில்லை. ஆனால் ரனிலுக்கு இந்த விடயம் குறித்து தனது தோழி சந்திரிக்காவிடம் கற்றுக்கொள்ள நிறைய விடயங்கள் உள்ளன !

சிங்களத்தில் Thilina Malalasekara 
தமிழில் Hisham Hussain, Puttalam

________________________________

இந்தக் கட்டுரையைத் தமிழில் தருவதன் நோக்கம், ‘யாருக்கு தீங்கு நடைபெற்றாலும் அதைத் தட்டிக்கேட்கும் பலம் இல்லாவிட்டாலும், சுட்டிக் காட்டி அறிவூட்டும் நல் உள்ளம்கொண்டவர்கள் இருக்கின்றார்கள்’ என்பதைக் காட்டுவதற்காக. அன்றி, ‘நம்மல்ல கைய வச்சி சிங்களவன் பருப்பு திண்பான்’ என்று நம்மை நாமே ஏமாற்றிக்கொள்வதற்காக அல்ல.

සති පොළවල් මුස්ලිම් වෙළෙඳුන්ට තහනම් කරමින්ද, රෝහල් මූලික කර ගත් මුස්ලිම්වරුන්ගේ ප්රජා සත්කාර හකුලා දමමින්ද, ව්යාපාර වර්ජනය කරමින්ද, මුස්ලිම් දරුවන් සිංහල පාසල්වලින් පන්නා දමමින්ද අපි ඉතා වේගයෙන් මුස්ලිම්වරුන්ව මහා සමාජයෙන් පිටමං කරමින් සිටිමු.
දැන් බයි සිංහලුන් සිතන්නේ මේ රටේ මුස්ලිම්වරුන් පරාජය බාරගෙන ලංකාවෙන් චුත වී අරාබියට යාවී යැයි කියාය.
එහෙත් ඇත්තටම සිදු වීමට නියමිතව ඇත්තේ දෙමළාගෙන් කෑවාටත් වඩා හොඳම එකෙන් සිංහලයාට අම්බ ටොපියක් සෙට් වීමය.
මෙවැනි තත්ත්වයක් වර්ධනය වීමට ඉඩ දී බලා සිටින්නේ අසමත් ආණ්ඩුවක් පමණි. අප්රේල් 21 සිදුවීම් සමුදායයට පසුබිම සකස්වීමේ පටන් අද දක්වාම මේ විෂයයේදී ආණ්ඩුව අසමත්ය.
මෑත ඉතිහාසයේ ලංකාවේ දකුණ මැනවින්ම පාලනය කරගත්තේ චන්ද්රිකා - අනුරුද්ධ රත්වත්තේ සුසංයෝගයය. එක ගිනි පුළිඟුවකින් ජාතිවාදී ගැටුම් ඇවිලවිය හැකි අන්දමේ හමුදාමය පරාජයන් වැලක් මැද්දේ පවා ඔවුහු දකුණ ජාතිවාදයෙන් තොරව තබා ගත්හ.
එකල රත්වත්තේ ප්රසිද්ධියේ කීවේ දකුණේ සාමාන්ය දෙමළාට එරෙහිව ප්රචණ්ඩත්වය වැපිරීමට උත්සාහ කරන්නන් අල්ලා සති දෙකක පුහුණුවක් දී උතුරට යවනා බවය. දකුණේ චණ්ඩි බලු වී ගියේ එවන් ප්රකාශ නිසාය.
සිරිසේන ගැන නම් කතා කර වැඩක් නැත. එහෙත් රනිල්ට නම් මේ කරුණ අරබයා සිය මිතුරිය චන්ද්රිකාගෙන් ඉගෙනීමට බොහෝ දේ ඇත!

Post a Comment

0 Comments