ஒரு ஊருக்கு பல சேவைகள் என்ற தொனிப்பொருளில் கல்பிட்டி பிரதேச சபைக்கு உட்பட்ட 48 கிராம சேவகர் பிரிவுகளில் கல்பிட்டி பிரதேச சபை தலைவர் A.M.இன்பாஸ் அவர்களின் ஏற்பாட்டில் கல்பிட்டி பிரதேச சபை உறுப்பினர்களின் ஒத்துழைப்புடன் மக்களின் முக்கிய சேவைகளை துரித கதியில் முடித்து கொடுப்பதற்காக நடமாடும் சேவை 22.07.2019 ஆரம்பித்து வைக்கப்பட்டது இந்நிகழ்வில் பிரதம அதிதியாக புத்தளம் மாவட்ட SLFP அமைப்பாளரும் முன்னால் மாகாண சபை உறுப்பினருமான N.T.M.தாஹிர் அவர்களும் கல்பிட்டி பிரதேச சபை உறுப்பினர்களும் கலந்து கொண்டனர்.
இந்நிகழ்வில் தெரிவு செய்யப்பட்ட கர்ப்பிணி தாய்மார்களுக்கு உணவு பொதியும் ,தெரிய செய்யப்பட்ட விளையாட்டு கழகங்களுக்கு விளையாட்டுப் உபகரணங்களும் வழங்கப்பட்டதும் குறிப்பிடத்தக்கது.
-Rizvi Hussain-
0 Comments