Subscribe Us

header ads

தாக்கப்படும் போது தற்பாதுகாப்பு எனும் கேடயத்தை பயன்படுத்துவோம்.



பண்டைய கண்டிய இராஜ்ஜியத்தில் ஆட்சிசெய்த இலங்கையின் அரசர்களின் மெய்பாதுகாவலர்களாகவும், படைத்தளபதிகளாகவும் வைத்தியர்களாகவும் இருந்த பரம்பரையில் வந்த கண்டியில் வாழும் எமது தைரியமிக்க உடன்பிறவா முஸ்லிம் சகோதரர்களின் கவனத்திற்கு!

இன்று (7/7/2019) நடக்கும் பொதுபல சேனாவின் பொதுக்கூட்டம் முடிவடைந்து அக்கூட்டத்தில்பேசப்பட்ட பேச்சிகளினால் உந்தப்பட்டவர்களினால் எமக்கெதிராக எந்நேரத்திலும் தாக்குதல்கள் மேற்கொள்ளப்படலாம்:

எனவே எமக்கு சட்டத்தினால் வழங்கப்பட்டிருக்கும்( private defense ) தற்பாதுகாப்பு எனும் கேடயத்தை தாக்கவரும் காடையர்களுக்கு எதிராக பாவித்து தாக்க வருபவர்களினால் எமக்கு ஏற்படுத்தப்படவிருக்கும் தாக்குதல்களின் வீரியத்தை குறைப்பதற்கான முதல் படியை மத்திய மலை நாட்டில் வைப்பதற்கு முயற்சிப்போம்.

அப்படியான தாக்குதல்களிலிருந்து எம்மை பாதுகாப்பது அரசர்களுக்கே பாதுகாப்பு வழங்கிய வீரப்பரம்பரையினர்களாகிய உங்களுக்கு ஒரு இலகுவான விடயமே! விடயத்திற்கு வருகிறேன்.

தற்பாதுகாப்பு என்றால் என்ன?

தனது குஞ்சுகளை பருந்திடமிருந்து பாதுகாப்பதற்கு ஒரு தாய்க்கோழி போராடுகின்ற சக்தியை வழங்கிய இறைவனின் ஆற்றலை நாம் நேரடியாக கண்டு வியந்திருக்கிறோம்.

அதே போன்றே பகுத்தறிவு எனும் ஆறாவது அறிவைக்கொண்ட மனித இனமும் தன்னை தாக்கவருகின்ற போதும் அல்லது தனது கண்களுக்கு முன்னே தனது உறவினர்கள் தாக்கப்படுகின்ற போதும் இயற்கையாகவே இறைவனால் வழங்கப்பட்ட தற்காப்பு செயற்பாடு தானாகவே செயற்படுவதை நாம் காண்கிறோம்.

உதாரணமாக ஒரு மனிதன் ஒரு பயந்தாங்கொல்லியாக இருந்தாலும் கூட தான் கஷ்டப்பட்டு உழைத்து ஒரு மோட்டார் சைக்கிளை ஒரு காடையன் தாக்குகின்ற போது அல்லது தனது வீட்டின் கேட்டை உடைக்கின்ற போது “எனது உயிர் போனாலும் பறவாயில்லை தாக்குபவனின் காதைக்கடித்தாவது துப்பவேண்டும்” என்னும் எண்ணம் சட்டென தோன்றி தாக்க வந்த காடையன் எவ்வாறான ஆயுதம் கொண்டு வந்திருந்தாலும் பறவாயில்லையென எமது தற்காப்புரிமையை பாவிக்க அவன் இயற்கையாகவே உந்தப்படுவதை அவதானிக்கின்றோம்.

இந்த உணர்வுக்கு மதிப்பளிக்கும் முகமாக இறைவனும் உனது உயிருக்கு அல்லது உடமைக்கு தீங்கை ஏற்படுத்துபவனுக்கு எதிராக உனது எதிர்ப்பைக்காட்டு அதில் உனது உயிர் பறிக்கப்பட்டால் கூட உனக்கு சுவர்க்கம் கிடைக்கும் என்பதை வெளிப்படுத்தியுள்ளான்.எனவே மத ரீதியாகவும் எமக்கு அனுமதியளிக்கப்பட்டுள்ளது.

சட்டரீதியாக எமக்கான அனுமதி எவ்வாற உள்ளத எனப்பார்ப்போம்.

ுஎமது நாட்டு தண்டணைச்சட்டக்கோவையும் இதனை அங்கிகரித்துள்ளது.

இச்சட்டத்தின் பிரிவுகளின் 89,90,91,92,93,94,95,96,97,98 மற்றும் 99 தற்காப்பு உரிமையென்றால் என்ன? அதனை எதற்கெதிராக பாவிக்கலாம்? அதன் எல்லைகள் எவை என்பதை விபரமாக கூறப்பட்டுள்ளது. 

அவற்றை சாதாரண பொதுமக்கள் வாசித்து புரிந்து கொள்ள முடியாது காரணம் “சட்டமொரு இருட்டறை” என்பதலாகும்.

இலகுவாக உங்களால் விளங்கிக்கொள்ளும்வகையில் “சட்டமொரு இருட்டறை அல்ல” யின் விளக்கங்கள் இதோ!

“தனது உடலை அல்லது எவரேனும் வேறு ஆளின் உடலை பாதுகாப்பதற்கும்”

“தனது சொத்தை அல்லது வேறு எவரேனும் ஆளின் சொத்தை பாதுகாப்பதற்கும்”

சில வரையறைகளுக்குட்பட்டு நாம் எது செய்தாலும் அது குற்றமாகாது.

மேற்கூறப்பட்டதன் படி காதைக்கடித்து துப்புவதிலிருந்து எதிரிக்கு மரணத்தை ஏற்படுத்தினாலும் அது குற்றமாகாது.

எந்த அளவிற்கென்றால் உண்மையான பைத்தியக்காரனால் அல்லது ஒரு சிறுவனினால் செய்யப்பட்ட கொலைக்காக அவர்களை தண்டிக்க முடியாது.முற்றாக அவர்கள் விடுதலை செய்யப்படுவார்கள்.அதே போன்றே தற்காப்புக்காக ஒருவரின் உயிரை ஒருவர் பறித்தாலும் அது குற்றமாகாது.அவர் விசாரணையின் பின் விடுதலை செய்யப்படுவார்.

அதற்காக வீதியில் கத்திக்கொண்டு போகிறவர்களை பிடித்து தாக்கி மரணத்தை ஏற்படுத்தி விட்டு தங்களுக்கு தற்காப்பு உரிமையிருக்கிறது 
என எம்மால் கூற முடியாது.

“தனக்கோ அல்லது பிறருக்கோ உயிராபத்தை ஏற்படுத்தக்கூடிய நியாயமான அச்சத்தை ஏற்படுத்தக்கூடிய எதிரியின் செயற்பாடு இருத்தல் வேண்டும்.”

எமது சட்டத்தில் எதிரிக்கு மரணத்தை பரிசாக வழங்கக்கூடிய சில உதாரணங்களை விளங்கப்படுத்தியிருக்கிறது.

அவையாவான 

1.மரணத்தை ஏற்படுத்தும் நியாயமான அச்சத்தை ஏற்படுத்துபவர்கள்.

2. கடும் காயத்தை ஏற்படுத்தும் நியாயமான அச்சத்தை ஏற்படுத்துபவர்கள்.

வாளை எடுத்துக்கொண்டு “உன்னை கொல்லாமல் விடமாட்டேன்” என கூறிக்கொண்டு எம்மை நோக்கி வருபவனைக்கண்டு புறமுதுகு காட்டி ஓடக்கூடாது. அவனது கை முந்தி விட்டால் எமக்கு உயிராபத்து வந்து விடும் அல்லது ஒரு கையை இழந்து இடது கையால் சோறு தின்ன வேண்டி வரும் என்ற நிலை வருமென நியாயமான அச்சம் எமக்கு வந்தால் பக்கத்திலிருக்கும் பூப்போச்சியை தூக்கியடித்தாவது எதிரிக்கு மரணத்தை பரிசாக வழங்கிவிடலாம்.

3.கற்பழிக்கும் நோக்குடன் உங்களை அணுகினால்,

4.இயற்கைக்கு முரணாக காம ஆசையை தீர்க்க நாடினார்

5. ஆளை கடத்தும் நோக்குடன் செயற்படுபவர்களுக்கு

6.ஒரு பகிரங்க உத்தியோத்தரை அதாவது பொலிசாரை அல்லது பாதுகாப்பு உத்தியோகத்தரை நாடுவதை தடுக்கும் முகமாக யாராவது தடைகளை ஏற்படுத்தும் தாக்குதல்களை மேற்கொண்டால் அதற்காகவும் அவர்களுக்கு மரணத்தை பரிசாக வழங்கிடலாம்.

ஒன்றை மட்டும் மனதில் வைத்துக்கொள்ள வேண்டும் “பொல்லால் அடிக்க வருகிறவனை வாலால் வெட்டிவிட்டு எனக்கு சறூக் லோயர் சொல்லித்தந்த தற்காப்புரிமை இருக்கிறது” என வீராப்பு பேசக்கூடாது. பொல்லால் அடிக்க வருபவனை பொல்லால் அல்லது அதை விட குறைந்த சாதனத்தினால் தாக்கி அதற்காக பதிலளிக்க வேண்டும்.

அவனது தாக்குதல் முந்தி விட்டால் எனது உயிர் போய்விடும் எனும் நியாயமான அச்சம் இருக்க வேண்டும்.

சொத்துக்களை அழிக்க வந்தாலும் எதிரிகளுக்கு மரணத்தை பரிசாக வழங்க முடியுமா?

ஆம் எமது அல்லது மற்றவர்களின் அசையும் ஆதனங்கள் (உதாரணங்களாக வாகனங்கள்,கால் நடைகள்,வர்த்தகப்பொருட்கள்,வீட்டுத்தளபாடங்கள் போன்றவை) அசையாத ஆதனங்கள்( உதாரணமாக நிலத்தோடு நிரந்தரமாக இணைந்திருப்பவைகள் 
கட்டடங்கள் போன்றவை) இவைகளை கொள்ளையடித்தல்,

இரவில் வீடு புகுதல்,சொத்தழிவு ஏற்படுத்தல் அதாவது தீ வைத்தல் 
என்பவற்றுக்கு எதிராகவும் எமது தற்காப்புரிமையை பாவித்து எதிரிகளுக்கு மரணத்தை ஏற்படுத்த முடியும்.

அப்படியான நிகழ்வு ஒன்று நடந்தால் சுமார்ஆறு மாத விசாரணையின் பின்னர் சட்டத்தினால் எமக்கு கொடுத்திருக்கும் தற்காப்புரிமையை பாவித்த செயல் வீரன் என்ற பெயருடன் விடுதலையாகலாம்.

எதிர் காலத்தில் பத்திரிகைகளில் “நகைகளை அணைத்த படி நகைக்கடைக்குள் சடலம் கண்டு பிடிப்பு”

“முஸ்லிமின் வீட்டுக்குள் வாலுடன் கருகிய நிலையில் வாலிபரின் சடலம் கண்டு பிடிக்கப்பட்டது” 

இவ்வாறான தலைப்புகளுடன் பத்திரிகைகள் செய்திகளை வெளியிட வேண்டும்.

ஒவ்வொரு பகுதிகளிலிருக்கும் சட்டத்தரணிகளும் படித்தவர்களும் சட்டத்தில் எமக்கு தரப்பட்டிருக்கும்
“தற்காப்புரிமையை” பாவிப்பதற்கான விளக்கத்தை பாமரர்களுக்கு வழங்குதல் வேண்டும்.

தேவையேற்படின் உங்களது கிராமங்களிலுள்ள சமூக சேவை நிறுவனங்கள் எம்மை அழைப்பார்களாயின் எமது FAST & FIRST TEAM (FFT) தற்பாதுகாப்பு தொடர்பாக மேலதிகமான தகவல்களை உங்கள் பகுதிகளுக்கு வந்து விளங்கப்படுத்துவதற்கு தயாராகயிருக்கிறோம்.எம்மை தொடர்பு கொள்ளவும்.

எமது சட்டம் தொடர்பான விளக்கங்களைப் பெற்று “தாக்கப்படும் போது தற்பாதுகாப்பு எனும் கேடயத்தை பயன்படுத்துவோம்”.

.....எந்த ஒரு சமூதாயத்தவரும் தம் நிலையைத்தாமே மாற்றிக்கொள்ளாத வரையில் அல்லாஹ் அவர்களை நிச்சமாக மாற்றுவதில்லை.(13:11)அல்குர்ஆன்.

குறிப்பு:

எனது “சட்டமொரு இருட்டறை அல்ல” இப்பக்கத்தினூடாக மக்களுக்கு சட்டம் தொடர்பான விளக்கத்தையளித்து மக்களுக்கு சட்டம் தொடர்பான விழிப்புணர்வை ஏற்படுத்துவதனூடாக தமது பிழைப்பில் மண் விழுவதாகவும் இதனூடாக என்னை நான் விளம்பரப்படுத்திக் கொள்வதாக எனக்கெதிராக சில முஸ்லீம் சட்டத்தரணிகள் உயர்நீதிமன்றில் முறையிட்டு எனது சட்டத்தரணி தொழிலை இல்லாமலாக்கும் முயற்சிகளில் ஈடுபடுவதற்கான முயற்சியிலீடுபடுவதாக நான் அறிகிறேன்.

அவர்களின் கவனத்திற்கு சட்டத்தரணிகளின் தொழில் நெறிமுறைக்கோவையின் பிரிவு 46 ன் படி “ஒரு சட்டத்தரணி சட்டம் தொடர்பான அல்லது சட்டத்தொழில் தொடர்பான விளக்கங்களை பத்திரிகைகளில் கட்டுரைகளாகவோ அல்லது ஊடகங்கங்களில் பேட்டியாகவோ அல்லது விரிவுரைகள் மூலமாகவோ TV அல்லது Radio மூலமாகவும் தெளிவுபடுத்தலாம். எனக்கூறப்பட்டுள்ளது.

எனவே சட்டத்தால் எனக்கு தந்திருக்கும் உரிமையினை பாவிப்பதை தடுப்பதற்கு யாருக்கும்
அதிகாரமில்லையென இத்தால் தெரிவித்துக்கொள்கிறேன் .

என்றும் மக்களுடன் மக்களுக்காக 

சட்டத்தரணி சறூக் - கொழும்பு

Post a Comment

0 Comments