Subscribe Us

header ads

தலைமைத்துவ வறுமையை ஏற்படுத்துவதே ரத்ன தேரரின் இலக்கு!




எதிர்கால முஸ்லிம் அரசியலில் பேரம் பேசும் சக்தியை இல்லாதொழிப்பதும் முஸ்லிம் சமூகத்துக்கான அரசியல் தலைமைத்துவ வறுமையையும் ஏற்படுத்தவுமே ரத்ன தேரர் கங்கணம் கட்டி செயற்படுகின்றார்.
மறைந்த மாமனிதர் மர்ஹூம் அஷ்ரப்புக்கு பிறகு முஸ்லிம் அரசியலில் ஏற்பட்டிருந்த தலைமைத்துவ வெற்றிடத்தை நிரப்ப தகுதியான தலைவராக றிசாட் பதியுதீன் தன்னை அடையாளப்படுத்திக் கொண்டார். குறிப்பிட்ட சில காலங்களுக்குள் அகில இலங்கை மக்கள் காங்கிரஸினை ஆரம்பித்து முழு இலங்கையிலும் அகலக்கால் ஊன்றினார்.
கடந்த இருபது வருடமாக தந்திரமாக சிதைக்கப்பட்ட சிறீலங்கா முஸ்லிங்காங்கிரஸ் வேறொரு ரூபத்தில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸாக ஒட்டு மொத்த பலத்தோடு, சமூகத்துக்காக வேண்டிய விட்டுக்கொடுப்புக்களோடும், ஒட்டியும் வெட்டியும் செல்வதும், அதன் தலைமைத்துவம் ஓர் கூர்வாளாக தன்னை அடையாளம் காட்டிக்கொண்டதும் ரத்ன தேரர் போன்றோரை இருப்புக் கொள்ள விடாது அச்சப்படுத்துகின்றது.
எதிர்கால இலங்கை அரசியலில் எவர் வந்தாலும் றிசாட் பதியுதீன் வரக்கூடாது என்பதுவே அவரின் கோரிக்கையாக இருக்கிறது. இதுவே தலைவர் றிசாட் பதியுதீனை ஒட்டுமொத்தமாக அரசியலில் இருந்து ஓரங்கட்டிவிட இன்று அவர் “அமைச்சை பாரமெடுத்தால் தூக்கு மாட்டி உயிரை மாய்த்தாவது செய்வேன்” என்று உளரும் நிலையை உருவாக்கியிருக்கிறது.
மாத்திரமன்றி எத்தனையோ வழிகளில் பொய்யானதும் போலியானதுமான குற்றச்சாட்டுக்களை புனைந்திட்ட போதும் அத்தனையில் இருந்தும் நீதிக்கும் உண்மைக்கும் கிடைத்த வெற்றியாக தலைவர் றிசாட் பதியுதீன் இலகுவாக வெளியேறுவது ரத்ன தேரரையும் அவர் சார்பு கொள்கைவாதிகளையும் ஒருவகை மனநோயாளிகளாக மாற்றியிருக்கிறது.
ஒரு இனத்தின் மீது வேண்டுமென்றே மேற்கொள்ளப்படும் வெறுப்பு பேச்சுக்களும் காவி அங்கியின் வலுவை வைத்து தலைமைத்துவத்தினை இல்லாது செய்துவிட எடுக்கும் முன்னெடுப்புக்களும் முஸ்லிம்களினை அரசியல் ரீதியாக தலைமைத்துவ வறுமைக்கு இட்டுச் செல்லும் செயற்பாடுகளேயாகும்.
இவ்வாறான நாசகார சிந்தனையில் இருந்து தப்பிக்கவும் வெளியேறவும் இறைவன் மீது தவக்கல் வைப்பதனை தவிர வேறு வழியேதும் தெரியவில்லை.
ஷிபான் BM
மருதமுனை.

Post a Comment

0 Comments