காத்தான்குடி, இன்றைய சமூக வலைத்தளங்களில் மிகவும் பரபரப்பும் விறுவிறுப்பும் கொண்ட ஒரு ஊர் இது. இலங்கையில் முஸ்லிம்கள் செறிவாக வாழ்கின்ற எத்தனையோ ஊர்கள் இருக்க இந்த காத்தான்குடி மட்டும் ஏன் இந்தளவு தூரம் பேசு பொருளாக காணப்படுகின்றது?
காத்தான்குடியில் நடக்கின்ற ஒரு சிறிய சம்பவம் கூட மிகவும் பாரியளவில் பேசுபொருளாக மாறுவது ஏன்?
தேசப்பற்று என்று கேள்விப்பட்டிருக்கிறேன், ஊர்ப்பற்று என்று ஒன்று இருக்கிறதா என்பதை காத்தான்குடி மக்களிடமே கேட்டுத் தெரிந்து கொள்ள வேண்டும். அந்த அளவுக்கு ஊர்ப்பற்று, ஊரின் கௌரவம் போன்ற சொற்கள் உயர்ந்த தொனியில் ஒலிக்கப்படுகின்ற ஒரு ஊர் என்றால் அது காத்தான்குடிதான்.
இது ஏன்? இதற்கான பின்னணியென்ன? நெடுநாட்களாக எனது மூளைக்குள் குடைந்து கொண்டிருந்த இந்த கேள்விகள் அனைத்திற்கும் கடந்த வாரம் காத்தான்குடிக்கு மேற்கொண்ட நான்கு நாள் பயணம் தெளிவான பதில்களை பெற்றுத்தந்தது.
காத்தான்குடி என்னும் இந்த ஊர் கிழக்கிலங்கையின் பிரசித்தி பெற்ற ஒரு ஊர். முஸ்லிம்களுடைய கல்வி, அரசியல், கலாச்சாரம் போன்ற அடிப்படை அத்திவாரங்களுக்கு இந்த ஊர்தான் அடிக்கல் நாட்டியுள்ளது.
அதேபோன்று இந்த நாட்டில் இஸ்லாமிய சமூகத்தின் ஜனநாயக உரிமைக்காகவும் இந்த ஊர் பல உயிர்களையும் உடமைகளையும் தியாகங்களையும் விலையாகக் கொடுத்துள்ளது.
இந்த ஊரில் ஒரு சிறுவனுக்கு 12 வயது தாண்டிவிட்டால் அவன் பாடசாலையில் படிக்கவேண்டும், அல்லது ஏதாவது தொழிலை நோக்கி நகர வேண்டும். 15 வயது தாண்டியும் ஒரு சிறுவன் பாடசாலை செல்லாமல் தொழிலும் இல்லாமல் இருந்தால் இந்த ஊரில் அவனை பார்க்கின்ற விதமே சற்று வித்தியாசமானது. அந்தளவுக்கு உழைப்புக்கு முக்கியத்துவம் கொடுக்கின்ற ஊர் காத்தான்
அதனால்தான் வடக்கிலிருந்து ஆயுத முனையில் விரட்டப்பட்ட அன்றைய காத்தான்குடியின் முஸ்லிம் தொழிலாளிகள் கூட இன்று வாழ்க்கையில் தோற்காமல் முன்னேறியுள்ளார்கள் என்பதை நேரடியாகவே காணக் கிடைத்தது.
இது தவிர இந்த ஊரின் பௌதீக சூழலும் அழகும் இறைவன் கொடுத்த அருட்கொடை என்றே சொல்லவேண்டும். அதற்குப் பின்னால் ஒரு அரசியல்வாதி இருப்பது அதிசயமானது. முஸ்லிம்கள் தனியாகவும் அதேநேரம் கூட்டாகவும் வாழ்வதில் காணப்படுகின்ற மார்க்க, கலாச்சார ரீதியான நன்மைகளை காத்தான்குடியில் இருந்து பார்த்தால் நிதர்சனமாக அறிந்துகொள்ளலாம்.
அரசியல் என்று வந்துவிட்டால் கூட மார்க்கத்தை முன்னிறுத்தி அரசியல் செய்கின்ற ஒரு ஊரென்றால் அது காத்தன்குடிதான். அந்தளவுக்கு இந்த ஊர் மக்களுடைய மார்க்க ரீதியான ஈடுபாடும் எதிர்பார்ப்பும் காணப்படுகின்றது.
பள்ளிவாயில்கள், மதரசாக்கள் என்று மார்க்கத்தை கட்டிக்காக்கும் நிலையங்கள். அதனோடு தொடர்புற்று வாழும் மனிதர்கள் என்று இறைவனின் அருளை எதிர்பார்ப்பதில் சடைவின்றி வாழும் ஊர் அது.
அரேபிய தேசத்தின் அழகுறும் சாயலில் அவ்வூரின் பௌதீக சூழல் உள்ளத்தில் ஏதோவொரு இனம் புரியாத மகிழ்வை ஏற்படுதத் தவறுவதில்லை. அந்த மகிழ்வும் அழகும் அவ்வூரின் பௌதீக சூழலில் மட்டுமல்ல அங்கு வாழ்கின்ற மக்களுடைய நடத்தையிலும், குணத்திலும் கூட ஊறிப்போன ஒன்று என்று தயங்காமல் கூறலாம்.
விருந்தினர்களை வரவேற்பதிலும் உபசரிப்பதிலும் இந்த ஊர் மக்களுக்கு நிகர் இவர்களேதான். மொத்தத்தில் சொல்லப்போனால் காத்தான்குடி என்பது குடியிருக்கத் தவறிய ஊர்களில் ஒன்று. எதிர்காலத்திலேனும் இந்த ஊரில் குடியேறி விடவேண்டும் என்று எண்ணிக் கொண்டிருக்கின்ற ஊராக இப்போது ஆகிவிட்டது.
காத்தான்குடி என்னும் எனது கனவு தேசம்....
-தாஹிரா நஸீர்-
காத்தான்குடியில் நடக்கின்ற ஒரு சிறிய சம்பவம் கூட மிகவும் பாரியளவில் பேசுபொருளாக மாறுவது ஏன்?
தேசப்பற்று என்று கேள்விப்பட்டிருக்கிறேன், ஊர்ப்பற்று என்று ஒன்று இருக்கிறதா என்பதை காத்தான்குடி மக்களிடமே கேட்டுத் தெரிந்து கொள்ள வேண்டும். அந்த அளவுக்கு ஊர்ப்பற்று, ஊரின் கௌரவம் போன்ற சொற்கள் உயர்ந்த தொனியில் ஒலிக்கப்படுகின்ற ஒரு ஊர் என்றால் அது காத்தான்குடிதான்.
இது ஏன்? இதற்கான பின்னணியென்ன? நெடுநாட்களாக எனது மூளைக்குள் குடைந்து கொண்டிருந்த இந்த கேள்விகள் அனைத்திற்கும் கடந்த வாரம் காத்தான்குடிக்கு மேற்கொண்ட நான்கு நாள் பயணம் தெளிவான பதில்களை பெற்றுத்தந்தது.
காத்தான்குடி என்னும் இந்த ஊர் கிழக்கிலங்கையின் பிரசித்தி பெற்ற ஒரு ஊர். முஸ்லிம்களுடைய கல்வி, அரசியல், கலாச்சாரம் போன்ற அடிப்படை அத்திவாரங்களுக்கு இந்த ஊர்தான் அடிக்கல் நாட்டியுள்ளது.
அதேபோன்று இந்த நாட்டில் இஸ்லாமிய சமூகத்தின் ஜனநாயக உரிமைக்காகவும் இந்த ஊர் பல உயிர்களையும் உடமைகளையும் தியாகங்களையும் விலையாகக் கொடுத்துள்ளது.
இந்த ஊரில் ஒரு சிறுவனுக்கு 12 வயது தாண்டிவிட்டால் அவன் பாடசாலையில் படிக்கவேண்டும், அல்லது ஏதாவது தொழிலை நோக்கி நகர வேண்டும். 15 வயது தாண்டியும் ஒரு சிறுவன் பாடசாலை செல்லாமல் தொழிலும் இல்லாமல் இருந்தால் இந்த ஊரில் அவனை பார்க்கின்ற விதமே சற்று வித்தியாசமானது. அந்தளவுக்கு உழைப்புக்கு முக்கியத்துவம் கொடுக்கின்ற ஊர் காத்தான்
அதனால்தான் வடக்கிலிருந்து ஆயுத முனையில் விரட்டப்பட்ட அன்றைய காத்தான்குடியின் முஸ்லிம் தொழிலாளிகள் கூட இன்று வாழ்க்கையில் தோற்காமல் முன்னேறியுள்ளார்கள் என்பதை நேரடியாகவே காணக் கிடைத்தது.
இது தவிர இந்த ஊரின் பௌதீக சூழலும் அழகும் இறைவன் கொடுத்த அருட்கொடை என்றே சொல்லவேண்டும். அதற்குப் பின்னால் ஒரு அரசியல்வாதி இருப்பது அதிசயமானது. முஸ்லிம்கள் தனியாகவும் அதேநேரம் கூட்டாகவும் வாழ்வதில் காணப்படுகின்ற மார்க்க, கலாச்சார ரீதியான நன்மைகளை காத்தான்குடியில் இருந்து பார்த்தால் நிதர்சனமாக அறிந்துகொள்ளலாம்.
அரசியல் என்று வந்துவிட்டால் கூட மார்க்கத்தை முன்னிறுத்தி அரசியல் செய்கின்ற ஒரு ஊரென்றால் அது காத்தன்குடிதான். அந்தளவுக்கு இந்த ஊர் மக்களுடைய மார்க்க ரீதியான ஈடுபாடும் எதிர்பார்ப்பும் காணப்படுகின்றது.
பள்ளிவாயில்கள், மதரசாக்கள் என்று மார்க்கத்தை கட்டிக்காக்கும் நிலையங்கள். அதனோடு தொடர்புற்று வாழும் மனிதர்கள் என்று இறைவனின் அருளை எதிர்பார்ப்பதில் சடைவின்றி வாழும் ஊர் அது.
அரேபிய தேசத்தின் அழகுறும் சாயலில் அவ்வூரின் பௌதீக சூழல் உள்ளத்தில் ஏதோவொரு இனம் புரியாத மகிழ்வை ஏற்படுதத் தவறுவதில்லை. அந்த மகிழ்வும் அழகும் அவ்வூரின் பௌதீக சூழலில் மட்டுமல்ல அங்கு வாழ்கின்ற மக்களுடைய நடத்தையிலும், குணத்திலும் கூட ஊறிப்போன ஒன்று என்று தயங்காமல் கூறலாம்.
விருந்தினர்களை வரவேற்பதிலும் உபசரிப்பதிலும் இந்த ஊர் மக்களுக்கு நிகர் இவர்களேதான். மொத்தத்தில் சொல்லப்போனால் காத்தான்குடி என்பது குடியிருக்கத் தவறிய ஊர்களில் ஒன்று. எதிர்காலத்திலேனும் இந்த ஊரில் குடியேறி விடவேண்டும் என்று எண்ணிக் கொண்டிருக்கின்ற ஊராக இப்போது ஆகிவிட்டது.
காத்தான்குடி என்னும் எனது கனவு தேசம்....
-தாஹிரா நஸீர்-
0 Comments