சுமார் முப்பது வருடங்களுக்கு மேலாக (1991தொடக்கம்) கல்பிட்டி அல்-அக்ஸா தேசிய பாடசாலையில் நடைபெற்று வந்த சின்ன நீதிமன்றம் என அழைக்கப்படும் மத்தியஸ்தர் சபை (சமத்த மண்டல) தற்காலிகமாக கல்பிட்டி பிரதேச செயலகத்தில் நடைபெறுவதை இன்று அவதானிக்கமுடிந்தது நெருக்கமான ஒரு அறையில் பல வழக்குகளை ஒன்றாக விசாரணை செய்வதினால் பல சிரமங்களுக்கு முகம்கொடுப்பதாக சமத்த மண்டல தலைவரும்,வழக்குகளை விசாரணை செய்பவர்களும் தெரிவிக்கின்றனர்,அல்-அக்ஸா பாடசாலை அதிபர் பாடசாலை கட்டிடத்தை தரமறுத்துள்ளதால் தற்காலிகமாகவே பிரதேச செயலகத்தில் நடைபெறுவதாகவும் அண்மைய நாட்களில் குறிஞ்சிப்பிட்டி பாடசாலை அல்லது பாலக்குடா பாடசாலைக்கு சமத்த மண்டல மாற்றப்படலாம் என்றும் கூறினர்.
இந்த அரச நிறுவனமான மத்தியஸ்தர் சபை எமக்கு தானாக கிடைத்ததால் இதன் அருமை எமது ஊரார்களுக்கு விளங்க வில்லையோ? பல ஊர்கள் (பாடசாலைகள்)இந்த மத்தியஸ்தர் சபை பெற்றுக்கொள்வதற்கு தற்போது போட்டி போடும் போது எமது ஊரால் எமக்கு சம்பந்தமில்லாது ஒன்று போல இருப்பது தான் ஆச்சரியமாக உள்ளது,
மின்சார சபை உப காரியாலயத்தை இழந்தோம் எம்மால் இதுவரைக்கும் பெறமுடிந்ததா ? இழப்பது சுலபம் பெறுவது தான் கடினம் போனால் கிடைக்காது இதுவரைக்கும் எம்மை விட்டு போனது கிடைத்து இல்லை ஆகவே எமது ஊர் புத்தி ஜீவிகளே அரசியல்வாதிகளே இரு பக்கமும் பேசி இதில் சாதக பாதகங்களை அராய்ந்து மத்தியஸ்தர் சபை மீண்டும் அல்-அக்ஸா தேசிய பாடசாலையில் நடைபெறுவதற்கு முயற்சி செய்யுமாறு மத்தியஸ்த சபைக்கு சமூகம் தந்தவர்கள் கூறியதற்கு இணங்காக உங்களிடம் கேட்டுக்கொள்கிறேன்.
-Rizvi Hussain-
0 Comments