1. மருதானை ரயில் நிலையம்
2. மருதானை புகாரீ தைக்காக
இலங்கையில் ரயில்வே போக்குவரத்தை ஆரம்பிப்பதற்கான தேவை பிரித்தானியர் அதிகம் உணர்ந்திருந்த காலம்.
மலைநாட்டில் உற்பத்தி செய்யப்படும் தேயிலையை கொழும்புக்கு எடுத்தவருவதற்காக ரயில் போக்குவரத்தை ஏற்படுத்துவதற்கான தேவையை உணர்ந்திருந்தார்கள். இதற்கமைய நாட்டில் பிரதான ரயில் நிலையங்களை அமைப்பதற்கான பணிகள் 1860ம் ஆண்டு காலப்பகுதியில் வேகமாக இடம்பெற்றறன.
இலங்கையில் சமகாலத்தில் கட்டுமாணத்துறையில் புகழ்பெற்றவர்களாக
1. அரசி மரிக்கார் வாப்பிச்சி மரிக்கார்,
2. ஜனாப் சாலி மரிக்கார்,
3. அல் ஹாஜ் ஹனீபா பாஸ் போன்றவர்கள் முன்னிலை வகித்தார்கள்.
இலங்கையின் அருங்காட்சியத்தை வாப்பிச்சி மரிக்கார் நிர்மாணித்தார்கள்.
கொழும்பு மருதானை ரயில் நிலையத்தை நிர்மாணிப்பதற்கு உள்நாட்டு, வெளிநாட்டு ஒப்பந்தக்காரர்களுக்கிடையில் கடுமையான போட்டி நிலவியது.
இலங்கையின் 18வது பிரித்தானிய ஆளுனர் நாயகமான சேர் ஜோஸப் வெஸ்ட் ரிஜ்வே (Sir Joseph West Ridgeway) அவர்களின் உத்தியோகபூர்வ வாசஸ்தலத்திற்கு ஜனாப் சாலி மரைக்கார் அவர்கள் அழைக்கப்பட்டு மருதானை ரெயில் நிலையத்தின் நிர்மாணப் பணிகளை மேற்கொள்வதற்கான ஒப்பந்தம் வழங்கப்படுகிறது
ஜனாப் சாலி மரைக்கார் அவர்கள் பிரித்தானிய கட்டடக்கலைக்கு அமைய மருதானை ரெயில் நிலையத்தின் பணிகளை குறுகிய காலத்தில் பூர்த்திசெய்தார்கள். 1908ம் ஆண்டில் சாலி மரைக்கார் அவர்கள் மருதானை ரெயில் நிலையத்தை பிரிடிஷ் நிர்வாகத்திடம் ஒப்படைத்தார்கள்.
ஜனாப் சாலி மரைக்கார் அவர்களின் சகோதரரான அல் ஹாஜ் ஹனீபா பாஸ் மரைக்கார் அவர்கள் கொழும்பு 10 போர்பஸ் லேனில் அமைந்துள்ள ''புகாரி தைக்காவை'' வடிவமைத்து நிர்மாணித்தார்கள். புகாரித் தைக்கா ஒப்பற்ற கட்டடவடிவமைப்புக் கலையை உள்ளடக்கியதாகும்.
( புகாரித் தைக்காவின் முதல் நிர்மாணப் பணிகளை ஆரம்பித்து வைத்தவர்கள் இந்தியாவின் கேரளா மாநிலத்தின் கண்ணூரைச் சேர்ந்த செய்யித் முஹம்மத் புகாரித் தங்கள் அவர்கள்.
பெரும் வர்த்தகரான புகாரித்தங்கள் அவர்கள் மாப்பிள்ளை லெப்பை ஆலிம் அவர்களுடன் இணைந்து இலங்கையில் சமயப் மற்றும் சமூக புணர்நிர்மாணப் பணிகளில் ஈடுபட்டதன் பின்னர் மலாக்கா, பதாவியா, ஜாவா , பர்மா ஆகிய நாடுகளுக்குச் சென்று டச்சுக் காலனிய எதிர்ப்புப் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் ஆவர்)
இவர்களே (அல் ஹாஜ் ஹனீபா பாஸ் மரைக்கார்)புத்தளம் முஹியத்தீன் பள்ளிவாசலையும், புத்தளம் கப்பல் பள்ளிவாசலையும் நிர்மாணித்தார்கள். புத்தளம் முஹியத்தீன் பள்ளிவாசளுக்குள் கடல் காற்றை உள்வாங்கி மின்விசிரிகள் இன்றி அதன் குளிர்மை தன்மையை பேணும் வகையில் வடிவமைத்த பெருமை அல் ஹாஜ் ஹனீபா பாஸ் மரைக்கார் அவர்களைச் சாரும். இவர்கள் அரபு மொழியில் எழுதிய அச்சு பதிவுகளை விட அழகான கையெழுத்துக்களை இன்றும் காணமுடியும்.
ஜனாப் சாலி மரைக்கார், அல் ஹாஜ் ஹனீபா பாஸ் மரைக்கார் ஆகியோர் இமாமுல் அரூஸ் செய்யித் முஹம்மத் மாப்பிள்ளை லெப்பை ஆலிம் அவர்களின் மகனான" ஜல்வத் நாயகம்" அவர்களின் மாணவர்கள் ஆவர்.
படங்கள் (கொழும்பு மருதானை ரெயில் நிலையம், கொழும்பு மருதானை புகாரித் தைக்கா)
0 Comments