Subscribe Us

header ads

இனாவதிகளுக்கு மகுடி வாசிக்கப்பட்டு இரத்தம் தோய்ந்த நாடாக்குவதற்கு தூபமிடப்பட்ட ஒரு நாள்தான் இன்று.



இலங்கை வரலாற்றில் இனாவதிகளுக்கு மகுடி வாசிக்கப்பட்டு இரத்தம் தோய்ந்த நாடாக்குவதற்கு தூபமிடப்பட்ட ஒரு நாள்தான் இன்று. 

ஆம் 15.06.2014. பேருவளை, தர்கா நகர் அதனைச் சூழவுள்ள கிராமங்கள் ஒரே இரவில் தீக்கிரையாக்கப்பட்ட நாள்...

அரசாங்கத்தின் கள்ள மௌனத்தில் முஸ்லிம்களில் பல கோடி பெறுமதியான உடமைகள் சில மணித்தியாளங்களில் நிர்மூலமாக்கப்பட்ட நாள்...

மாடறுப்பதற்கு போர் கொடி தூக்கிய ஒரு நாட்டில் மூன்று அப்பாவி மனித உயிர்கள் சமாதியாக்கப்பட்ட நாள்...

ஒட்டுமொத்த ஊடகங்களும் ஏதோ பேர்மூடாவில் நடக்கின்ற சம்பவம் போல் குரட்டை விட்டு தூங்கிங் கொண்டிருக்க, முகநூல் உட்பட சில இணைய ஊடகங்கள் செய்திகளை உடனுக்குடன் வெட்டவெளிச்சப்படுத்திக் கொண்டிருந்த பெருமையான தருணம் பதிவு செய்யப்பட்ட நாள்...

நாடே நிசப்தத்தில் உறைந்து போயிருக்க, அடுத்த நாள் காமராஜர் வேடம் போட்டு யானைக் குட்டியை சோற்றில் மறைப்பது போன்று "எமக்கும் தர்கா நகர் சம்பவத்திற்கும் எந்தவித தொடர்பும் இல்லை" என்று முதலைக் கண்ணீர் வடித்தது பொதுபல சேனா. 

சூத்திரதாரி சூரியன் போல் கண்னெதிரே வலம் வந்து கொண்டிருக்க அரசாங்கம் குருடனாக நடித்துக் கொண்டிருந்தது.

அந்த குறுட்டு ஜனநாயகம் இன்றளவும் தொடர்கிறது என்றால் நாட்டின் நீதி, சமத்துவத்துவத்தின் வேட்டி பறந்து போய் தீவிரவாதத்தின் முகம் என்றழைக்கப்பட்ட மியம்மார் விராதுவிற்கு பொன்னாடை போட்டு அழகு பார்க்கின்றது.

ஒட்டுமொத்தமாக நாட்டின் ஜனநாயகம் குட்டுப்பட்டு கீழே விழுந்திருக்க காட்டுதர்பாக்கள் நாட்டை ஆழ்ந்து கொண்டிருக்கிறார்கள் என்பதையே தொடர்தேர்ச்சியான முஸ்லிம் விரோத சம்பவங்கள் நமக்கு எடுத்துக் காட்டுகின்றன. 

அரசியல் சூழ்ச்சிகளால் செத்துக் கிடக்கும் ஜனநாயகத்தை உயிர்ப்பித்து எழுப்பும் ஓர் நீதிமிக்க அரசாங்கத்தையே நாட்டு மக்கள் கனவு கண்டு கொண்டிருக்கின்றனர். 

கனவு நனவாகுமா? இல்லை மீண்டும் வேதாளம் முறுங்கை மரம் ஏறுமா?

MK Yasir

Post a Comment

0 Comments