கல்பிட்டியின் மிக முக்கிய பிரபலமான ஜூம்ஆ பள்ளிகளின் ஒன்றான கல்பிட்டி பெரிய பள்ளியின் நிர்வாக தெரிவு எதிர் வரும் வெள்ளிக்கிழமை( 28-06-2016) ஜூம்ஆ தொழுகைக்கு பின் ஜூம்ஆ பள்ளி மத்ரசா பகுதியில் நடைபெற ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
அண்மையில் புதிய நிர்வாக தெரிவு செய்வதற்கான கூட்டம் நடைபெற்ற போது ரமலான் மாதத்தை முன்னிட்டு ரமலான் மாத முடியும் வரைக்குமான காலப்பகுதியில் தற்போதைய நிர்வாகம் தொடர்ந்து செயல்படுவதற்கான தீர்மானம் பொது மக்களால் மேற்கொள்ளப்பட்டதும் குறிப்பிடத்தக்கது.
தற்போதைய தலைவராக செயல்பட்டு வரும் சகோதரர் சாஜஹான் அவர்கள் ஏழு வருடங்கள் தலைவராக கடையாற்றி உள்ளார் என்பதோடு இதேபோல நீண்டகாலங்கள் மர்ஹூர் நெய்னா மாஸ்டர் அவர்களும் தலைவராக கடமையாற்றியுள்ளார் என்பதும் விஸேட அம்சங்களாகும்.
இந்நிகழ்வில் பெரிய பள்ளி நிர்வாகத்திற்குட்பட்ட ஜமாத்தார்கள் அனைவரும் கலந்துகொண்டு அமைதியான முறையில் திறமையான நிர்வாக குழு உறுப்பினர்களை தெரிவு செய்யுமாறு தற்போதைய நிர்வாக சபை கேட்டுக்கொள்கிறார்கள்.
-Rizvi Hussain-
0 Comments