Subscribe Us

header ads

அபாயாவை நாமே விட்டுக் கொடுத்துவிடுவோமோ!

முஸ்லிம் பெண் அரச உத்தியோகத்தர்கள், அபாயாவுக்கு எதிராக வெளியிடப்பட்டுள்ள சுற்றுநிரூபத்திற்கு எதிராக மனித உரிமை ஆணைக்குழுவில் முறைப்பாடு செய்வதற்கான விண்ணப்பப்படிவத்தை நிரப்பி பதிவுத் தபாலில் அனுப்பி வைப்பது தான் உரிமையை வென்றெடுப்பதற்கான வழி.
குறைந்தது 100 முறைப்பாடுகள் முறையீடு செய்யப்பட்டிருப்பின் தான் இப்பிரச்சினைக்கு அழுத்தம் ஏற்படும், இல்லையேல் இப்பிரச்சினை பார்ப்பாரற்று உரிமை பறிபோன பின் வருந்துவதில் எவ்வித அர்த்தமும் இல்லை.
இன்று வரை ஒரு முறைப்பாடு தான் பதிவு செய்யப்பட்டிருப்பதானது, முஸ்லிம் பெண் அரச உத்தியோகத்தர்களது பொறுப்பற்ற நிலையை எடுத்துக்காட்டுகிறது. நமக்கேன் இந்த பிரச்சினை, இதில் தலையிடக்கூடாது, மற்றவர்கள் பார்த்துக்கொள்வர் என்ற பொடுபோக்கினால் நாமே எமது உரிமையை விட்டுக் கொடுத்து மண்ணை தலையில் அள்ளிப் போட வேண்டியது தான்.
வருகின்ற 28 ஆம் திகதி முறைப்பாடுகளுக்கான இறுதி நாள் என்பதை கவனத்தில் கொண்டு பொறுப்புடன் செயற்படுமாறு வினயமாக வேண்டுகிறேன்.
மாற்று மத அமைச்சர்கள் இச்சட்டத்தை எவ்வாறாவது நடைமுறைப்படுத்த மாற்றம் மாற்றம் எனும் பெயரில் காலத்தைக் கடத்துவதை நாம் உற்று நோக்கும் அதே நேரம், இவ்வுரிமையை வென்றெடுக்க ஆசிரியைகள், காரியாலய உத்தியோகத்தர்கள் பயப்படாது, முன் வந்து குறித்த விண்ணப்பங்களைப் பெற்று, நிரப்பி உரிய முயற்சிகளை செய்ய முயற்சி செய்வதே காலத்தின் தேவை.
இச்சுற்றுநிரூபம் இன்னும் முடிவுக்கு கொண்டு வரப்படாமல் இருப்பதால் இலங்கையில் ஆங்காங்கே முஸ்லிம் பெண்கள் பணியிலிருந்து துரத்தப்படுவதும், கண்டனங்களுக்கு உட்படுத்தப்படுவதுமாக கஷ்டப்படுகின்றனர். இதே நிலை புத்தளம் பிரதேசத்தில் கருவெலகஸ்வெவ எனுமிடத்திலுள்ள பிரதேச செயலகத்தில் ஒரு சில வாரங்களுக்கு முன்பும், இன்றும் தொடர்கிறது, குறிப்பாக இன்று இங்கு முஸ்லிம் பெண்களை பணியில் அமர விடாது காரியாலயங்களை விட்டு மாற்று மத பணியாளர்கள் துரத்தியுள்ள சோக நிகழ்வு அரங்கேறியுள்ளதையாவது நினைத்து, ஏனைய இடங்களில் இது இடம்பெறக்கூடாது என்பதையும் கருதிற்கொண்டு பெண் ஆசிரியைகளும், பெண் காரியாலய உத்தியோகத்தர்களும் இவ்விடயத்தில் பொறுப்புடன் செயற்படுவது மிக மிகத் தேவையாகும்.
சட்டத்தரணிகள், குரல்கள் இயக்கம் வாதாடுவதற்கு தயாராக இருந்தும், வழக்குத் தாக்கல் செய்வதற்கும், மனித உரிமைகள் ஆணைக் குழுவில் முறைப்பாடு செய்வதற்கும் யாருமில்லாதது தான் வேதனையளிக்கிறது.
முயற்சித்ததால் முடியாதது ஒன்றுமில்லை
நன்றி: அ(z)ஸ்ஹான் ஹனீபா

Post a Comment

0 Comments