நேற்று (24. 6. 2019) காலை மினு/கல்லொழுவை என்ற முஸ்லிம் கிராமத்தில் நடந்த மிகவும் வேதனைக்குரிய, அதே நேரம் வன்மையாக கண்டிக்கப்படக்கூடிய இனவாதத்திலும் ஒரு கீழ்த்தரமான மதவாதச் செயல் நடந்துள்ளமையை மிகவும் மன வருத்தத்தோடு எமது சமூகத்துக்குத் தெரிவிக்கிறேன்.
கொழும்பு புதுக்கடையை சேர்ந்த ஒரு தாய் (65) கல்லொழுவையில் வசிக்கும் தனது மகளின் வீட்டிலிருந்து நேற்றுக் காலை கொழும்புக்கு செல்வதற்காக நடந்து சென்று கொண்டிருந்த வேளையில், மினுவங்கொடை பிரதான வீதியிலிருந்து வந்த ஒரு ஆட்டோ அத்தாயின் அருகிலே மிகவும் மெதுவாக நெருங்கியதாக முன்னே சென்று மீண்டும் பின்னோக்கி வந்ததும் ஆட்டோவில் இருந்து இரு சிங்களக் காடையர்கள் அந்தத் தாயுடைய முந்தானையை இழுத்துப் பறித்து அந்த தாயின் கழுத்தி்ல் கட்டிவிட்டு கீழே வீதியில் தள்ளிவிட்டு அப்படியே ஆட்டோவை ஓட்டிக் காெண்டு சென்றுள்ளனர். சற்று தூரம் வரை அந்தத் தாய் ஓலமிட்டுக் கதறியபடி உடல் தரையிலே உரசியவாறு இழுத்துச் செல்லப்பட்டுள்ளார்.
அத்தோடு அந்தத் தாய் முந்தானையை இழுத்தெடுத்து எழுந்து நின்று சத்தமிட்டு கத்தவே அந்தக் காடையர்கள் அவரை விட்டு விட்டு வேகமாகச் சென்று மறைந்துள்ளனர்.
அப்போது அவ்விடத்திற்கு வந்த இன்னுமோர் ஆட்டோக்காரர் அவரருகே ஆட்டோவை நிறுத்தி "என்ன நடந்தது?" என்று வினவ, அத்தாய் நடந்ததை சொல்லி அழ, அவர் அந்தத் தாயை அவரது மகள் வீட்டில் கொண்டு சென்று சேர்த்துள்ளார்.
ஊரிலுள்ள சில பெண்கள் வெகுண்டெழுந்து இந்த தாய்க்கு நடந்த அநியாயத்தை தட்டிக் கேட்க வேண்டும் என மினுவங்கொடை பொலிஸ் நிலையம் சென்றுள்ளனர். அங்கே அவர்கள் வைத்தியசாலையில் அனுமதிக்குமாறு சொல்லி அனுப்பியுள்ளனர்.
இப்போது அந்தத் தாய்க்கு சர்க்கரை அளவு மற்றும் இரத்த அழுத்தம் அளவுகள் உயர்ந்தும் உடல், தலை எங்கும் உரசல் காயங்களாடும் வைத்தியசாலையில் தங்கி இருக்கின்றார்.
இந்தச் சம்பவத்திற்கு நாம் யாரிடம் நீதி தேட வேண்டும்?
ஊரிலுள்ள பொஹட்டுவ மந்திரி ஷுஹைதர் மற்றும் ஐ. தே. க. மந்திரி Gகப்பார் ஹாஜியாா் அவர்களே..!
உங்களால் இவ்வாறான வன்செயல்களைத் தடுக்க முடியாவிட்டாலும் குறைந்த பட்சம் இவ்வன்முறையைக் கண்டித்து ஒரு கண்டன அறிக்கையையாவது வெளியிடவும் முடியவில்லையா?
கல்லொழுவை ஊரைச் சேர்ந்த முஸ்லிம் ஆண்களே!
நீங்கள் இனியாவது காெஞ்சம் தலை நிமிர்ந்து கொள்ளுங்கள். இ்ல்லையேல் நாளை உங்கள் வீட்டுப் பெண்களுக்கும் இதேபோல் நடப்பதற்கும் வாய்ப்புக்கள் உண்டு என்பதை உணர்ந்து செயற்படுங்கள்.
இன, மத வெறியர்களை இன்னுமின்னும் தலைதூக்கி ஆட விடாதீர்கள்.
நன்றி: Noor Noory
0 Comments