உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் பின்னர் சிங்களவர் முஸ்லிம்களின் கடைகளைப் புறக்கணித்தனர். அதற்கு எதிராக சிலர் முன்வந்தாலும் இதன் மூலம் முஸ்லிம்களின் வர்த்தக ஏகாதிபத்தியத்தை வீழ்த்திவிடலாம் என்பதே பெரும்பான்மை கருத்தாக இருந்தது.
‘பேருவளை ஹோட்டல்’ கொசு மொய்ப்பதையும் நோ லிமிட் கார் தரிப்பிடம் பாழடைந்து கிடப்பதையும் படம்பிடித்து முகநூலில் பதிவேற்றி அற்ப இன்பம் அடைவதற்கும் சிலர் மறக்கவில்லை.
தற்போது அதன் விளைவுகள் தோன்ற ஆரம்பித்துள்ளன. கையில் பணத்தோடு கிராமம் கிராமமாக அலைந்து வெற்றிலை, பாக்கு, தேங்காய், கொப்பறா, தென்னங்குச்சி, மஸாலாப் பொருட்கள் (Spices) கொள்வனவு செய்த முஸ்லிம் வியாபாரிகள் தமது வேலையைக் கைவிட்டுவிட்டனர்.
இலங்கையில் மட்டுமல்ல, உலகில் எந்தவொரு நாட்டிலும் ஏற்றுமதி-இறக்குமதி வியாபாரம் முஸ்லிம்களின் கைகளிலேயே தங்கியுள்ளது. முஸ்லிம் சமூகம் உலகமெங்கிலும் பரவுவதற்குக் காரணமாக இருந்ததும் இந்த வர்த்தகக் கலாசாரம் தான்.
தாக்குதலுக்கு முன்னர் 35.00 ரூபாவாக இருந்த தேங்காயின் விலை தற்போது 20.00 - 25.00 க்கு வந்துவிட்டது. 10,000 வெற்றிலைகளை சந்தைக்கு எடுத்துச் சென்று, அதில் 3,000 வெற்றிலைகளை வெறும் 850.00 ரூபாய்க்கு விற்றுவிட்டு மீதி 7,000 வெற்றிலையையும் ஊருக்குள் கொடுத்துவிட்ட விவசாயி ஒருவரை நாத்தண்டியவுக்கு அன்மித்த கிராமத்தில் சந்தித்தேன்.
ஒரு நாளைக்கு 5,000 பாக்குகளை சீவல் செய்த தெரனியகலையைச் சேர்ந்த சிங்கள வியாபாரி ஒருவர் தனது வியாபாரத்தைத் தொடர முடியாமல் ஊழியர்களை வீட்டுக்கு அனுப்பிவிட்டு சீவல் தொழில்சாலையை (நேற்று ) மூடிவிட்டதாக தெரனியகலை தர்ம என்பவர் கூறினார்.
இந்த உதாரணங்கள் அனைத்தும் உண்மையானவை. சவால் விடுவோரை குறித்த வியாபாரிகளிடம் நேராக அழைத்துச் செல்வேன். இவை தனிமைப்பட்ட சம்பவங்கள் அல்ல. கிராமங்களின் தோன்றியுள்ள பொதுவான நிலைப்பாடு இதுதான்.
இலங்கையின் மஸாலாப் பொருட்களில் 85% சேருவது இப்றாஹிமுக்கு. கண்டி, மாத்தளை, குருனாகல், மஹியங்களை, பதுலை போன்ற பிரதேசங்களில் இருந்து மஸாலாப் பொருட்களின் மொத்த கொள்வனவு கடுகஸ்தொடையில் அமைந்துள்ள இப்றாஹிமுடைய தம்பியின் வர்த்தக நிலையத்தை வந்தடையும். இன்று அந்த கடை மூடப்பட்டுள்ளது. பெருட்களை எவரும் பொறுப்பேற்பதில்லை. இப்றாஹிம் தனது வியாபாரத்தை நிறுத்தியுள்ளதால் கொழும்பிலுள்ள ஏனைய மொத்த கொள்வனவாளர்கள் ‘அடி மாட்டு விலைக்கு’ வாங்குகின்றார்கள். இதன் காரணமாக மஸாலா சேகரிப்பு நின்றுவிட்டது. விற்பனைக்கு தயார்படுத்திய மஸாலாப் பொருள் வீடுகளில் அழுகுகின்றது.
வெளியில் தெரியாவிட்டாலும் இந்த நெருக்கடி மிகவும் பயங்கரமானது. அது எந்தளவுக்கு பயங்கரமாகுமென்றால், 2001 இல் நடைபெற்றது போல் பொருளாதார வளர்ச்சி வேகம் பூஜ்யத்தை விட கீழிறங்க வாய்ப்புள்ளது. இந்த ஆண்டின் ஆரம்பத்தில் 2.5% வெகு சொற்ப வளர்ச்சியை அடைந்த நாடொன்று இந்த வீழ்ச்சியைத் தாங்கிக்கொள்ளாது.
மறுதலையாக, கழிவறை மட்பாண்டம் மற்றும் டைல்ஸ் பிடிக்கும் மேசன் பாஸ்மாருக்கு முஸ்லிம் வியாபாரப் புறக்கணிப்பினால் தொழில்கெட்டுப் போயுள்ளது. திஹாரிய, நாவல ஆகிய பிரதேசங்களுக்கு கழிவறை உபகரணங்களை மொத்தமாக இறக்குமதி செய்வோர் முஸ்லிம் வியாபாரிகள் ஆவர்.
நினைத்தால் செய்ய முடியாதது எதுவுமில்லை என்று கூறும், வர்த்தகத்தை மேலோட்டமாக் காணும் ஒருவர் ‘சிங்களவர்களாகிய நமக்கு இவற்றை வாங்கி எக்ஸ்போர்ட் பன்ன முடியாதா?’ என்று நினைக்க தோன்றலாம். ஆனால் யதார்த்தம் அதுவல்ல.
‘தெரிந்து செய் வியாபாரம் - தெரியாமல் செய் விவயாசம்’ என்ற முதுமொழி உருவானது இதனால்தான். திட்டமிடல் இல்லாமல் மேற்கொள்ளப்படும் எந்தவொரு வியாபார முயற்சியும் இறுதியில் முடிவடைவது 1994 - 96 ஆம் ஆண்டுகளில் ‘சிங்கள வீர விதஹன’ அமைப்பு நெல் வாங்கியது போன்று கையால் போட்டு திண்டதுதான் மிச்சம் என்ற நிலைக்குத்தான்.
சிங்களத்தில் Gnanendra Pradeep Pathirana
தமிழில் Hisham Hussain, Puttalam
சிங்கள மூல கட்டுரையின் இணைப்பு
_____________________________
இந்தக் கட்டுரையில் கூறப்பட்டுள்ளதை வாசித்து மனதில் பதித்து, முஸ்லிம் வர்த்தகப் புறக்கணிப்பு யதார்த்தமானது அல்ல என்பதை உங்கள் சிங்கள மொழிமூல நண்பர்களுடன் பகிர்ந்துகொள்ள உதவியாக இருக்கும், இன்ஷாஅல்லாஹ்
0 Comments