==================================
விளையாட்டாக நினைக்காது நடவடிக்கை எடுக்குமா முஸ்லிம் தலைமைகள்?
==================================
இலங்கையில் நடக்கும் அனைத்து இனப் பிரச்சனைகளுக்கும் நாங்களே காரணம் என முகநுால் ஊடாக இலங்கையில் இருந்து யுத்த காலத்தில் சுவிஸ்லாந்திற்குத் தப்பி ஓடிய மார்க்கண்டன் தேவராஜ் அறிக்கை விட்டிருந்தார்.
இவர் கருத்து தெரிவிக்கும்போது; யுத்த காலத்தில் மேற்கத்திய நாடுகளுக்குப் புலம் பெயர்ந்து சென்று தாங்கள் நாடு கடந்த தமிழ் ஈழ அரசு ஒன்றை ஏற்படுத்தி இருப்பதாகவும், தான் கிழக்கு மாகாணத்திற்கான அரசுக்கு பொறுப்பாளர் எனவும் குறிப்பிட்டு எனது முயற்சியின் காரணமாகவே முன்னாள் ஆளுநர் ஹிஸ்புள்ளாஹ் பதவி நீக்கப்பட்டார் என்றும், அனைத்து முஸ்லிம் மக்களின் பிரச்சனைகளுக்கும் நாங்களே காரணம் என்றும் தெரிவித்தது மட்டுமல்லாது பௌத்த துறவிகளையும் தாங்கள் இணைத்து உள்ளதாகவும், காத்தான்குடியை 1000 பிக்குகளைக் கொண்டு சுற்றி வளைப்போம் என்றும் கூறி இருந்தார்.
இலங்கையில் இடம்பெறும் இத்தனை குழப்பங்களுக்கும் இந்த "நாடு கடந்த தமிழ் ஈழ அரசு" எனும் அமைப்புத்தான் பணம் வழங்குகின்தா? என்ற சந்தேகம் இதனால் எழுகின்றது.
01. மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் வியாழேந்திரன் சமீபத்தில் உண்ணாவிரதம் இருந்தது.
02. கிழக்கில் நடைபெற்ற முன்னாள் ஆளுநர் ஹிஸ்புள்ளாஹ்வுக்கு எதிரான கருத்துக்கள் பரவலாக்கம் செய்யப்பட்டமை.
03. ஹிஸ்புள்ளாவின் "பெற்றிக்கலோ கெம்பஸ்" பல்கலைக்கழகத்திற்கு அண்மையில் பிக்குவின் தலைமையில் பல பிக்குகள் பயணம் செய்தது.
இத்தாலியில் வசிக்கும் புலம் பெயர் தமிழர் ஒருவர் தற்கொலையாளி சஹ்ரானின் வளர்ப்புப் பிள்ளைபோல் "முஸ்லிம் மக்களை கொலை செய்வோம்" என்ற கோஷத்துடன் முகநுாலில் கருத்து சொல்கின்றார்.
இருந்தும் இவர்களின் தொணியிலே சஹ்ரானும் இருந்தபடியினால் நாட்டின் தேசிய பாதுகாப்பு கருதி புலம் பெயர் இயங்கங்களின் நிதி மற்றும் ஊடகங்களின் மீது அரசாங்கம் அவதானத்தை செலுத்த முஸ்லிம் தலைமைகள், சிவில் அமைப்புக்கள் அரசாங்கத்திற்கு அழுத்தம் கொடுக்க வேண்டும்.
மேற்கத்திய நாடுகளில் புலம் பெயர்ந்து வாழும் அமைப்புக்கள் மீது கவனம் செலுத்த வேண்டிய நிலையிலும், இலங்கையிலுள்ள அமைப்புக்களுக்கு மேற்கத்திய நாடுகளில் இருந்து வரும் பண உதவிகளின் மீதும் அரசாங்கம் உடனடியாகக் கவனம் செலுத்த வேண்டும் என முஸ்லிம் தலமைகள் மற்றும் சிவில் அமைப்புக்கள் குரல் கொடுக்க வேண்டும்.
தமிழ், முஸ்லிம், சிங்கள மக்களிடம் ஒற்றுமையை வளர்க்க வேண்டிய இந்த நேரத்தில் வேற்றுமையை ஏற்படுத்தும் தீய சக்திகளாக வெளிநாட்டில் சுக போக வாழ்க்கையை அனுபவித்து வாழும் சில இனவாதிகளின் சிந்தனைகளை நாம் அடையாளம் கண்டு அழித்திட முயற்சிப்போம்.
இந்தப் பதிவு புலம் பெயர்ந்த ஒரு சிலரின் முஸ்லிம் விரோத இனவாதப் பேச்சைக் கேட்டதற்கு பிறகு எழுந்த சந்தேகம் மட்டுமே!
நன்றி: Faisal Eakob
0 Comments