Subscribe Us

header ads

கேரளாவில் கடல் இரண்டாக பிரிகிறதா ?


கடல் பகுதிக்குள் 500 மீட்டர் தூரம் வரை மக்கள் நடந்து செல்லும் வகையில் மணல் முகடு சமீபத்திய கேரளா கனமழை தருணத்தில் உருவாகியது.

பொன்னானி கடற்கரை :

பொன்னானி கடற்கரை கேரளாவின் மலப்புறம் மாவட்டத்தில் அமைந்துள்ளது. கடந்த செப்டம்பர் மாதம் பொன்னானி கடற்கரை ஊடகங்களில் தலைப்பு செய்தியாக மாறியது.

இதற்கு காரணம், கடல் பகுதியில் மணல் முகடு உருவாகி கடலுக்குள்ளே 500 மீட்டர் தூரம் வரை மக்கள் நடந்து செல்ல முடிகிறது. மணல் பகுதியில் நடந்து செல்லும் பொழுது கடலின் நடுவே பாலம் அமைத்து தண்ணீரில் நடந்து செல்வது போன்று சில சமயங்களில் உணர வைக்கும்.


2018 ஆகஸ்ட மாதம் கேரளாவில் ஏற்பட்ட கனமழை காரணமாக வெள்ளம் சூழ்ந்து மாநிலமே நிலைக் குலைந்தது. இதில், பாரதப்புழா ஆற்றில் இருந்து அடித்து செல்லப்பட்ட மணல் பொன்னானி கடற்கரை பகுதியில் படிந்ததால் இவ்வாறான முகடு உருவாகியது எனக் கூறுகின்றனர். எனினும், இவ்வாறான மணல் பாதை உருவாகியது ஆச்சரியமான ஒன்றாக உள்ளது.

செய்தி வைத்து பொன்னானி கடற்கரையில் இருப்பது வெள்ளத்தால் உருவான மணல் பாதை மட்டுமே என்பதை இதில் இருந்து அறிவதன் மூலம் கடல் இரண்டாக பிரிகிறது என்று எண்ணிவிட முடியாது என்று விஞ்ஞானிகளின் கூற்றாகும். 

ஆனால் அல்லாஹ் நாடினால் காப்பாற்ற வேண்டும் என்று நினைத்தால் நடந்துவிடும் மூஸா(அலை) சமுகத்தை ஃபிர்அவ்னிடம் இருந்து அந்த மக்களை காப்பாற்ற கடலை இருண்டாக பிளந்து வழி ஏற்படுத்தினானே அதை விஞ்ஞானமும் ஒப்பு கொள்கிறது. ஆனால் அல்லாஹ் பல ஆண்டுகள் முன்தாகவே தன்னுடைய வல்லமையை வெளிபடுத்திவிட்டான்.



அல்லாஹ்வின் தூதர் முஸா(அலை) சமுகத்தை காப்பாற்ற கடலை இரண்டாக பிளந்த இந்த நிகழ்வை விஞ்ஞான பூர்வமாக சாத்தியமானது என்று கூறியுள்ளார்கள்

எப்பிடி ???

இவற்றை கம்ப்யூட்டர் கிராபிக் மூலம் இதில் இவர்கள் 12 மணித்தியாலங்கள் 63 மைகல்கள் வேகத்தில் வீசும் காற்று இரண்டு மீட்டர் ஆழமுள்ள தண்ணீரை புறம் தள்ளகூடியது என்றும் நான்கு மணித்தியாலங்களுக்கு பாதையையும் ஏற்படுத்தும் என்பதை காட்டுகின்றனர் இந்த விஞ்ஞான ஆய்வு நிறுவனமான (#National #center #for#Atmospheric #Research-#NCAR மற்றும் #அமெரிக்க#பல்கலைக்கழகமான (#The #university #of #colorado) ஆகியவர்கள் இந்த சம்பவம் சாத்தியமே என்று கூறுகிறார்கள்.
சிந்திக்ககூடிய அறவீனர்களுக்கு தக்க சான்றுகள் உள்ளது இந்த திருமறை குர்ஆனில் குர்ஆனில் கூறப்பட்ட அனைத்து சம்பவங்களும் அத்தாட்சியாக அல்லாஹ் கூறுகிறான் மேலும் சம்பவங்களை அதை பற்றிய ஆய்வு செய்பவர்கள் மூலம் நிருபித்து காட்டுகிறான் அல்லாஹ்


وَهَٰذَا صِرَاطُ رَبِّكَ مُسْتَقِيمًا ۗ قَدْ فَصَّلْنَا الْآيَاتِ لِقَوْمٍ يَذَّكَّرُونَ

126. இதுவே உமது இறைவனின் நேரான வழி. சிந்திக்கின்ற சமுதாயத்திற்காக சான்றுகளைத் தெளிவுபடுத்தி விட்டோம்.

#திருக்குர்ஆன் 6:126

إِنَّمَا مَثَلُ الْحَيَاةِ الدُّنْيَا كَمَاءٍ أَنزَلْنَاهُ مِنَ السَّمَاءِ فَاخْتَلَطَ بِهِ نَبَاتُ الْأَرْضِ مِمَّا يَأْكُلُ النَّاسُ وَالْأَنْعَامُ حَتَّىٰ إِذَا أَخَذَتِ الْأَرْضُ زُخْرُفَهَا وَازَّيَّنَتْ وَظَنَّ أَهْلُهَا أَنَّهُمْ قَادِرُونَ عَلَيْهَا أَتَاهَا أَمْرُنَا لَيْلًا أَوْ نَهَارًا فَجَعَلْنَاهَا حَصِيدًا كَأَن لَّمْ تَغْنَ بِالْأَمْسِ ۚ كَذَٰلِكَ نُفَصِّلُ الْآيَاتِ لِقَوْمٍ يَتَفَكَّرُونَ

24. இவ்வுலக வாழ்க்கைக்கு உதாரணம், வானிலிருந்து நாம் இறக்கிய தண்ணீரைப் போன்றது. மனிதர்களும், கால்நடைகளும் உண்ணுகிற பூமியின் தாவரங்களுடன் அத்தண்ணீர் கலக்கிறது. முடிவில் பூமி அலங்காரம் பெற்று கவர்ச்சியாக ஆகிறது. அதன் உரிமையாளர்கள் அதன் மீது தமக்குச் சக்தி இருப்பதாக நினைக்கும் போது நமது கட்டளை இரவிலோ, பகலிலோ அதற்கு (பூமிக்கு) கிடைக்கிறது. உடனே நேற்று அவ்விடத்தில் இல்லாதிருந்தது போல் அறுக்கப்பட்டதாக அதை ஆக்கி விடுகிறோம். சிந்திக்கின்ற சமுதாயத்திற்கு இவ்வாறே சான்றுகளைத் தெளிவுபடுத்துகிறோம்.

#திருக்குர்ஆன் (10:24)

இதை விட சான்றுகள் என்ன இருக்க முடியும். இந்த அகிலங்களை படைத்து ஆட்சி செய்பவன் அல்லாஹ் ஒருவன் மட்டும் தான் என்பதை அல்லாஹ் படிப்பினைகள் முழியமாக உணர்த்துகிறான் மக்களுக்கு சிந்திக்க மாட்டீர்களா ???

Post a Comment

0 Comments