Subscribe Us

header ads

கோழி உற்பத்தியில் 100% தன்னிறைவு அடைந்து அடைந்து விட்டோம் - கத்தார் அறிவிப்பு!


கோழி இறைச்சி உற்பத்தியில் நாம் 100க்கு 100 வீதம் தன்னிறைவு அடைந்து விட்டோம் என்பதாக கத்தார் உத்தியோக பூர்வமாக அறிவித்துள்ளது. அந்த அறிவிப்பை கத்தார் நகராட்சி மற்றும் சுற்றுச் சூழல் அமைச்சர் அப்துல்லா பின் அப்துல் அஸீஸ் அவர்கள் நேற்று (14.03.2019) வெளியிட்டுள்ளார்கள். 

அந்த அறிவிப்பில் கத்தார் தற்போது கோழி மற்றும் பால் பொருட்கள் உற்பத்தியில் 100க்கு 100 வீதம் தன்னிறைவு அடைந்துள்ளது. காய்கறி உற்பத்தியில் 24 வீதமானவை தற்போது கத்தாரில் உற்பத்தி செய்யப்படுகின்றது. எதிர்வரும் 5 வருடங்கள் 24 வீதத்திலிருந்து 70 வீதமாக அதிகரிக்கும் திட்டங்கள் தற்போது நடைமுறைப்படுத்தப்படுவதாகவும் தெரிவித்துள்ளார்.



கடந்த 2017ம் ஆண்டு ஜுன் மாதம் கத்தாருடனான தொடர்புகளை சவுதிக் கூட்டணி நாடுகள் முறித்துக் கொண்டதுடன் அங்கிருந்து உணவுப் பொருட்களை இறக்குமதி செய்வதையும் நிறுத்திக் கொண்டன. இதன் பின்னர் கத்தார் தங்களுக்குத் தேவையான உணவுப் பொருட்களை ஈரான், துருக்கி உட்பட முக்கிய நாடுகளிலிருந்து இறக்குமதி செய்ததுடன் சுய உற்பத்திக்கான நடவடிக்கைகளையும் மேற்கொண்டது. 


அதில் மிக முக்கியமானது தான் கோழி உற்பத்தியும், பால் உற்பத்தியுமாகும். வெளிநாடுகளில் இருந்து தொழில்நுட்ப வல்லுநர்களை தருவித்து உள்நாட்டில் உற்பத்திகளை ஆரம்பித்தது. அரபு நாடுகள் புறக்கணித்து இரண்டு வருடங்கள் முடிவடைவதற்கும் பால் உற்பத்தி மற்றும் கோழி இறைச்சி உற்பத்தியில் தன்னிறைவு அடையும் அளவு முன்னேறி இருக்கின்றது என்றால் அதைப் பாராட்டாமல் இருக்க முடியாது. வாழ்த்துக்கள் கத்தார்.

Post a Comment

0 Comments