Subscribe Us

header ads

தலைவர் பதவியில் இருந்து விலகும் எண்ணம் தனக்கு இல்லை - மார்க சூக்கர் பேக் திட்டவட்டமாக தெரிவிப்பு


முகநூல் நிறுவனத்தின் தலைவர் பதவியில் இருந்து விலகும் எண்ணம் தனக்கு இல்லை என மார்க் சூக்கர்பர்க் தெரிவித்திருக்கிறார். 

முகநூல் நிறுவனத்தில் தொடர்ந்து பிரச்சனைகள் ஏற்பட்டுள்ள நிலையில் முகநூல்  நிறுவனர் மார்க் சூக்கர்பர்க் தலைமை பொறுப்பில் இருந்து விலகுவாரா என்ற கேள்விகள் எழுந்துள்ளன. 

இது குறித்த கேள்விக்கு, தற்போது  'முகநூல்  தலைமை பொறுப்பில் இருந்து பதவி விலகுவது குறித்து எந்த திட்டமும் இல்லை' என முகநூல் நிறுவனர் மார்க் சூக்கர்பர்க் பதில் அளித்து இருக்கிறார்.

'அத்துடன் முகநூல்  தலைமை நிர்வாக அதிகாரியான ஷெரில் சான்ட்பெர்க்கும் தன்னுடன் தொடர்ந்து பணியாற்றுவார் என அவர் தெரிவித்தார். முகநூல் நிறுவனத்திற்கு ஷெரில் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தவர், பல முக்கிய திட்டங்களுக்கு அவர் தலைமை வகிக்கிறார்,' என அவர் தெரிவித்தார்.

'கடந்த பத்து ஆண்டுகளாக ஷெரில் எனக்கு மிகவும் முக்கியமான சக பணியாளராக இருக்கிறார். அவரது பங்களிப்பு மற்றும், நாங்கள் இருவரும் மேற்கொண்ட பணிகளை பார்த்து பெருமை கொள்கிறேன், மேலும் நாங்கள் இருவரும் இணைந்து பல ஆண்டுகள் பணியாற்றுவோம் என நம்புகிறேன்,' என அவர் தெரிவித்தார்.

2016ம் ஆண்டு நடைபெற்ற அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் முகநூல் தலையிட்டு, வேட்பாளர்களை வெற்றி பெற செய்ய உதவியாக இருந்தது என்ற குற்றச்சாட்டு அந்நிறுவனத்தின் நற்பெயருக்கு முதல் அடியாக அமைந்தது. பின் இதில் தொடர்புடைய கேம்பிரிட்ஜ் அனாலிடிகா நிறுவனம் மீது சட்ட ரீதியான நடவடிக்கை எடுக்கப்பட்டது.

சட்ட நடவடிக்கையில் பலர் தொடர்ந்து சிக்கியதைத் தொடர்ந்து முகநூல் பயனர் விவரங்கள் களவாடப்படுவதாக பலமுறை தகவல்கள் வெளியாகி, இவற்றில் சிலவற்றை முகநூல் ஒப்புக் கொண்டு அவற்றை சரி செய்வதாக தெரிவித்து இருக்கிறது.


முகநூலில் மிகப்பெரும் பிரச்சனைகள் இருக்கிறது, அதை நான் இல்லை என்று கூறவில்லை.. எனினும், முகநூல்  பற்றி வெளியாகும் செய்திகளில் உண்மை இருந்தாலும், அவை அனைத்தும் உண்மை இருப்பதாக என நான் நினைக்கவில்லை. என அவர் தெரிவித்தார்

Post a Comment

0 Comments