Subscribe Us

header ads

முஸ்லிம் தேசம்: ஒரு புறம் கடல் அரிக்கிறது, மறு புறம் பேரின குடியேற்றம் அரிக்கிறது!


அழிவைத் தடுக்கும் அமைதிப் பேரணி" யிற்கு கட்சி அரசியல் இயக்க பிரதேச வேறுபாடின்றி தென்கிழக்கில் உள்ள சகலரும் ஆதரவு வழங்க வேண்டும்!

1996 ஆம் ஆண்டு ஒலுவிலில் மீன்பிடித் துறைமுகம் ஒன்றே தேவை, தேசிய கப்பல் போக்கு வரத்துத் துறைமுகம் வேண்டாம் என்று அதற்கு பல்வேறு நியாயங்களை நான் முன்வைத்த பொழுது ஏளனம் செய்தவர்கள் பலர் இன்று உயிருடனும் இல்லை.

என்றாலும், தலைவர் அஷ்ரஃபிற்கு தென் கிழக்கை பற்றிய ஒரு தெளிவான பார்வை இருந்தது, அல்லாஹ்வின் நாட்டம் எப்படியோ என அறியேன், அவர் இன்றிருந்திருந்தால் காலம் கடந்து விட முன்னரே தீர்வுகளை முன் வைத்திருக்கலாம் என ஆழ் மனம் சொல்கிறது.

இனி ஒருவரை ஒருவர் குறை சொல்லிப் பயனில்லை, கட்சி அரசியல், பிரதேச வேறுபாடுகளுக்கு அப்பால் ஒலுவில் மாத்திரமல்ல கரையோரப் பிரதேசங்களில் முஸ்லிம் குடியிருப்புகள் கால நிலை மாற்றங்களினால் எதிர் கொள்ளவுள்ள சச்வால்கள் குறித்து உரிய நடவடிக்கைகளை மேற்கொள்வோம்.

தென்கிழக்குப் பல்கலைக் கழகம் இது தொடர்பான விரிவான ஒரு ஆய்வை மேற்கொள்வதும் அரசியல் சிவில் தலைமைகளை அறிவுறுத்துவதும் காலத்தின் கட்டாயமாகவுள்ளது.

எமது சமூகம் எதிர்கொள்கின்ற சவால்கள் எமது அரசியலை விடவும் பாரதூரமானவை, யுகத்தின் புதிய சவால்கள் பற்றி நாம் இன்னும் சிந்திக்கவும் தலைப் படவில்லை என்பதுவே கசப்பான உண்மை, இது புதிய புதிய சவால்கள் நிறைந்த புதிய தலைமுறைகளின் யுகம், அவர்களுக்கு வழிகாட்டி வழி விடுவோம்.

-Inamullah Masihudeen-

Post a Comment

0 Comments