Subscribe Us

header ads

எது எப்படியோ உலக நாடுகளில் இருக்கும் சவூதி தூதரகங்கள் இனிக் கண்காணிப்படப் போகின்றன.


சவூதி அரேபியாவின் அதிகாரக் கட்டுமானங்களில் படிந்து போய் இருக்கும் சர்வாதிகாரத்தை விமர்சித்த ஊடகவியலாளர் ஜமால் கஷோகியை துருக்கி நாட்டின் சவூதி தூதரகத்தில் வைத்துத் தனது கசாப்புக் கடைக் கும்பலை வைத்துப் படுகொலை செய்ததை ஒத்துக் கொண்டு இருக்கிறது சவூதி..சவூதியில் இருந்து விசேடமாகத் தருவிக்கப்பட்ட Non schedule flight இல் துருக்கி வந்ததாகக் கூறப்படும் பதினைந்து பேர் கொண்ட கொலைகாரக் கும்பல் தான் இந்த அவலத்தின் நாயகர்கள். இந்தக் களேபரத்திலும் உலகில் சிலைகள் வைப்பதற்கு தடை விதிக்கப்பட்ட நாடு.

உலகில் குர்ஆன் ஹதீஸைப் பரப்புவதில் அதிகம் செலவிடும் நாடு .

பகிரகங்கமாக விபச்சாரம் செய்ய முடியாத ஒரே நாடு .

இப்படி மன்னன் சல்மானுக்கு கனவில் கால் மசாஜ் செய்யும் ஒரு இலங்கை அடிமை அனுப்பிய வாட்ஸ் அப் மெஸேஜ் வேறு வந்து தொலைக்கிறது..அறபுத் தீபகற்பத்தில் அதிக முட்டாள்களைக் கொண்ட நாடு, ஒரு விமர்சனத்தைக் கூடத் தாங்க முடியாத நாடு.90 களின் தொடக்கம் முதல் ஈராக்கை அழிக்க அமெரிக்காவுக்குத் தன் இராணுவத்தலங்களைப் பகிர்ந்து கொண்ட நாடு, கட்டார் மீது பொருளாதாரக் காழ்ப்பில் தடை விதித்த நாடு, எல்லாவற்றுக்கும் மேலே அமெரிக்காவினதும் இஸ்ரேலினதும் சின்ன வீடு போல இருக்கும் நாடு, ஏகப்பட்ட அறிஞர்களை சிறை வைத்து இருக்கும் நாடு, என்று தான் சித்த சுயாதீனமுள்ளவர்களுக்குத் தெரியும்.மக்கா மதீனா என்ற புனித ஸ்தலங்கள் மட்டும் இல்லாவிட்டால் நாய் தூக்கிக் கொண்டு போய் இருக்கும்.

இலங்கைப் பணிப் பெண் ரிஸானா நபீக் விவகாரத்தில் பல்லுக்குப் பல், கண்ணுக்கு கண் என்ற கணக்கில் ஷரீ ஆ சட்டத்தை அமுல்படுத்துகிறேன் பேர்வழி என்று மரண தண்டனை நிறைவேற்றிய சவூதி அரசு இப்போது செய்திருக்கும் படுகொலைக்குப் பரிகாரமாக மாட்சிமை பொருந்திய தீயசக்தி இளவரசன் சல்மான் சாகும் வரை தூக்கில் தொங்க வேண்டும்.மன்னரின் கட்டளை இன்றி இப்படி ஒரு படுகொலை நடக்க வாய்ப்பே இல்லை.

இப்படி ஒரு அவலம் ஈராக்கில் சதாம் ஹுஸைன் ஆட்சியிலோ பிடல் காஸ்ட்ரோ ஆட்சி செய்த கியூபாவிலோ, யூகோசாவிஸின் வெனிசூலாவிலோ அவ்வளவு ஏன் சீனாவிலோ ரஷ்யாவிலோ நடந்திருந்தாலும் இந்நேரம் அமெரிக்கா பொருளாதாரத் தடையைப் பார்சல் பண்ணி இருக்கும்.ஆனால் சவூதி என்பது அமெரிக்காவிற்குப் பொன் விளையும் பூமி.சவூதி என்ற தரகனை நடுமையத்தில் வைத்துக் கொண்டு சுற்றி வர அடிமை ஸ்பேர் பார்ட்ஸ்களாக குவைத், எகிப்து , எமிரேட்ஸ் என்று இஸ்லாமிய தேசங்கள் வேறு..

மத்திய கிழக்கில் இத்தனை முஸ்லிம் நாடுகள் இருந்தும் ஒரு கீறல் விழாமல் இஸ்ரேல் நிம்மதியாய் இருப்பதன் சரித்திரப் பின்னணியே இது தான்..இந்நிலையில் அமெரிக்கா தனது மாமா பையன் சவூதியை எப்படி எதிர்கொள்ளப் போகிறது என்று தெரியவில்லை..ட்ரம்ப் உம் அடிமுட்டாள் பாசிஸ்டாய் இருப்பதால் சுவாரசியமான நாவலின் பக்கங்கள் போல இருக்கின்றன அடுத்துவரும் நகர்வுகள்..

எது எப்படியோ உலக நாடுகளில் இருக்கும் சவூதி தூதரகங்கள் இனிக் கண்காணிப்படப் போகின்றன.இலங்கையில் இருந்து கொண்டு சவூதியை அரபு ஆங்கில மொழிகளில் விமர்சித்துக் கட்டுரை எழுதியவர்கள் ஹஜ், உம்றா கடமைகளை நிறைவேற்ற சவூதி தூதரகம் போவது மிகவும் ரிஸ்கானது..ஹலால் கொலை செய்ய ஒரு இறைச்சிக் கடைக் கும்பல் எந்நேரமும் காத்து இருக்கலாம்..

-Zafar Ahamed-

Post a Comment

0 Comments