கனவு காண்பதற்கு கள்ளத்தனம் தேவையில்லை: பொதுவாக இளைஞர்களை தான் எல்லோரும் கனவு காணும் படி சொல்வது வழக்கம், ஆனாலும் கனவு என்பது எல்லோருக்கும் காண முடியும் என தெரிந்திருந்தும் அது இளைஞர்களின் மேல் திணிக்கப்படுவதை கொஞ்சம் ஜீரணிக்கமுடியாமல் தான் இருக்கிறது.
ஒரு இளைஞனாக நான் என்னுள் ஆயிரம் கனவுகளை கண்டுள்ளேன், நித்திரையில் வரும் கனவு என் மனதில் ஆழமாய் இருக்கும் விடயம் என்றுசொன்னாலும் கூட, முழித்துகொண்டு காணும் கனவில் தான் ஆழ்ந்த எண்ணங்களையும், கொள்கைகளையும் நான் ஆசையோடு செதுக்கியிருக்கிறேன்.
நான் செதுக்கிய என் கனவில் ஒவ்வொருன்றும் இலக்குகளாக இருக்கிறது, அதில் அனைத்தும் நனவாக மாறமருத்தாலும், மாற மறுக்கும் கனவுகளுக்கும் குருக்குவழி காட்டி நனவாக்க வழியும் சமைத்துள்ளேன். (இறைவனுக்கே எல்லாப்புகழும்). சில நேரம் செதுக்காத கனவுகளை விட திடீர் என அப்பப்ப நடக்கும் நனவுகளை வர்ணிக்க வார்த்தையே கிடையாது. (அது என் நல்ல முயற்சிகளுக்கு இறைவனின் கூலி என நினைத்து பெற்றுக்கொள்வேன்).
இத்தனையும் தாண்டி இப்போது வந்திருக்கும் காலம் தான் கொஞ்ஞம் என்னை தடுமாற வைக்கிறது, இந்த காலத்தில் நான் செதுக்கிய கனவு ஒன்று நனவாக வேண்டும் ஆனால் இந்த காலம் தான் அந்தக்காலமா? என்ற கேள்வி என்னுள் எழுத்துள்ளது. இதற்கு வாசிக்கும் நீங்களே பதில் தரவேண்டும்.
என் இளம் பருவத்தின் இறுதி நேரத்தில் ஒரு முக்கிய நகர்வை நாம் எடுப்பதற்கான அனைத்து ஆயத்தப்படுத்தளையும் செய்திருந்தோம், “நாம்” என்று சொன்ன காரணம் நான் செதுக்கிய “சமூகத்துக்காக என்னோடு ஒத்துப்போக கூடிய நபர்களை சேர்த்தல்” என்ற ஒரு கனவு நனவாகியத்தை குறிக்கிறது.
அவ்வளவு ஆயப்படுத்தியும் எம்மில் ஒருவர் கேட்டார், “இளம் எப்போ முடிவடைகிறது”? அதன் இறுதிக்காலம் தான் என்ன?” என்று. அந்தக்கேள்விக்கு இன்னும் பதில் கிடைக்கவில்லை. ஆனாலும் பின்வரும் இலக்கத்தில் ஒன்றுதான் என நினைக்கிறோம்.
1. இலங்கையின் தேசிய இளைஞர் கொள்கைன் படி, 15 வயது முதல் 29 வயது வரை என சொல்லி இருக்கிறது.
2. ஐக்கிய நாடுகள் சபையின் கொள்கையின் அடிப்படையில், 15 வயது முதல் 24 வயது வரை சொல்லி இருக்கிறது.
3. இலங்கையின் தேர்தல் சட்டத்தின்படி, இளைஞர் வேட்பாளர் ஒருவர் 18 வயது முதல் 35 வயது வரை என சொல்லி இருக்கிறது.
ஆக உங்களுக்கு மேலுள்ள மூன்று இலக்கத்தில் எந்த இலக்கம் சரி என தோணுகிறதோ அதை எமக்கு சொல்லி காரணத்தையும் எழுதுங்கள்.
எனது பிறந்த நாள் 1988ஆண்டு ஒக்டோபர் மாதம் 28ஆம் திகதி என்பதை மனதில் வைத்து பதில் தாருங்கள்.
நன்றி
இப்படிக்கு வலக்கரம்
0 Comments