இஸ்லாம் மார்க்கம் ஒரு மனிதன் காலையில் எழுந்து இரவு தூக்கத்துக்கு செல்லும் வரை எவ்வாறு நடந்து கொள்ள வேண்டும் என்று இஸ்லாம் கற்றுத் தந்துள்ளது..
அந்த வகையில் தற்காலத்தில் சீர் தூக்கி நிற்கும் பாரிய பிரச்சினை பெண்கள் ஆடை பற்றிய விடயத்தில் ரொம்ப மோசமான நிலை ஆகிவிட்டது .
முதலில் ஆடை ஏன் உடுத்த வேண்டும் ? நம்மை பாதுகாத்து கொள்வதற்காவும்,பிறருடைய ஆபாச பார்வையிலிருந்து பாதுகாத்துக் கொள்ளவும் , மேலும் சபலத்தையும் காமத்தையும் ஏற்படுத்துவத்தை தவிர்ப்பதற்காகவும் ஆணுக்கும், பெண்ணுக்கும் வழங்கிய கேடயமே ஆடை.
இவ்வாறு ஆடை தம்மை பாதுகாத்துக் கொள்வதற்கே தவிர பயிரை மேய்வதற்கான வழியை நாமல ஏற்படுத்திக் கொடுப்பது நாம் நமக்கு வைக்கும் சூனியமாகும்...
தலைக்கணம் பிடித்து இன்று சில பெண்கள் எங்களுக்கு எல்லா உரிமையும் உண்டு, அது எங்களுடைய விருப்பில் தங்கி உள்ளது என்று கூறி பாதுகாப்பை தவறும் ஆடைகளுக்கு சார்ப்பாக கோசம் எழுப்புகின்றனர். அதற்கு பல ஆண்களும் வாவ் ,ஓசம் தோழி , சரியாக சொன்னிங்க தோழி என்று அல்லக்கைகள் சேர்ந்து ஒலி எழுப்புகின்றனர்...
பெண்களின் ஒழுக்க மாண்பிற்கு ஒரு அளவு கோலாக அமைகின்றது, மானங்காக்கும் முழுமையான பாதுகாப்பிற்கும் கற்பொழுக்கம் பேணவும் வெட்கம், மானம், மரியாதை காக்கவும் இறைவனால் அருளப்பட்ட அருட் கொடையே ஆடைகளாகும்.
மேலும் ஆண்கள் குற்றம் புரிவதற்கு தூண்டுதலாகவே இந்த முறையற்ற கலாசாரம் ஒரு காரணியாகும். பெண்கள் தாமே தமக்குரிய அழிவையும், இழிவையும் தேடிக் கொள்வதாக இருப்பது வேடிக்கைக்குறியேதாகும். பாதுகாப்பு கவசத்தையை துளையிட்டு உபயோகிப்பதாகவே இன்றைய சில பெண்களின் நிலை. ஹபாயா என்பதை நவீன பெசனாக மாறி இறுக்கமாக அணிந்து தலைமட்டும் மெல்லிய துணியால் #காயத்துக்குபெண்டேச் போட்டால் போல் சுற்றி மூடிவிடுகின்றனர். மறைக்க வேண்டிய பகுதி மறைக்க மறந்து விடுகின்றனர். ..
இது இவ்வாறு இருக்க கலாசாரம் என்ற சாயத்தை தமக்கு தாமே திணித்து கால நேர தேவைகளுக்காக நாம் மாற்றிக் கொள்கிறோம் என்று வாய் கூசாமல் வெட்கம் இன்றி பேசுகிறார்கள். இன்று எத்தனையோ பல்கலைக்கழகங்களில் முஸ்லிம் பெண்களுக்காக பல்கலைக் கழக மாணவர்களுக்குள்ளே ஓர் அமைப்பு இயங்குவதை பலர் அறியாத விடயமொன்றே அவர்கள் முஸ்லிம் மாணவர்களின்ஆடைகளுகுகாக போராடிக் கொண்டு மாற்றத்தையும் கொண்டு வந்தனர். ஆனாலும் சில முஸ்லிம் பெண்கள் நாகரீகத்தில் மிதமிஞ்சியவர்கள் தங்கள் ஆடைகளில் ஆடம்பரத்தையும் கர்வத்தையும் காட்டுவதாங ஆடை அணிவது கவலைக்குறிய விடயமாகும்...
கலாசாரம் காலத்திற்கும் சூழலுக்கு ஏற்றவாறு மாறுகிறோம் இது எமது உரிமை என பேசும் பெண்களே இங்கு இவ்வாறு கூறி பதிலளித்துவிடுகிறீர். மறுமையில் இந்த பதில் அல்லாஹ்விடத்தில் ஏற்றுக் கொள்ளப்படுமா??? அஞ்சிக் கொள்ளுங்கள் சகோதரிகளே..
தொழுவது ,நோன்பு பிடிப்பது , பிறருக்கு உதவுவதை ஸகாத் இப்படியான சிலவல மட்டும்தான எமக்குரிய கடமை?? எமது வாழ்வை எவ்வாறு அமைத்துக் கொள்ள வேண்டும் என்று நபி வழிகள் அமைத்து தந்துள்ளன பேணவேண்டிய விடயங்கள் நம் மீது விதியாக்கப்பட்டுள்ளது.அதனடிப்படையில் ஆடையை உள்ளதா என்று சிந்தித்துப் பாறுங்கள்.
இதை விட்டு நம் மனம் போன போக்கில் போகலாமா?
ஆண்களே பெண்களை மட்டும் குறை கூறிவிட்டு இருந்து விட முடியாது. நீங்க செய்ய வேண்டிய கடமைகளும் உண்டு என்பதை மறந்திடாதீர்கள்.உங்கள் மனைவி பிள்ளைகள் சகோதரிகள் ஆடை விடயத்தில் கேள்வி உண்டு மறுமையில் மறந்து விடாதீர்கள்..
மேலும் பிழையான கருத்துகளுக்கு ஊக்கம் கொடுக்காதீர்கள்.பலர் சரி என்று திரும்ப திரும்ப கூறும் பட்சத்யில் அது பிழையாக இருப்பின் சரியாக மாறிவிடும். தவறு எனில் சுட்டிக் காட்டுங்கள். இவ்வாறான கருத்துக்களை ஆதரிப்பதன் மூலம் ஏனைய பெண்களுக்கு வழிகாட்டலாக அமைந்து விடும்.
ஷரீஆ வரையறைகளுக்கேற்பதான முறையில் உடை அணியும் போது பெண்ணினத்திற்கு இம்மை, மறுமை இரண்டிலும் பல நன்மைகளும் பயன்களும் கிடைக்க அது வழிவகுப்பதுண்டு....
ஆகவே சகோதரிகளே இதுவரை எப்படி இருந்தீர்களோ அதை விட்டு விட்டு இறைவனுக்கு பொறுத்தமான முறையில் அனைத்து செயற்பாடுகளையும் அமைத்துக் கொள்ளுங்கள்..
0 Comments