மே மாதம் 5ஆம் திகதி முதல் உற்பத்திசெய்யப்படும் பால்மாவிற்கே புதிய விலை பொருந்தும். எனவே கையிருப்பிலுள்ள பால்மாவை புதிய விலைக்கு விற்பனை செய்வோர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படும் என நுகர்வோர் பாதுகாப்பு அதிகார சபை அறிவித்துள்ளது.
கடந்த வெள்ளிக்கிழமை நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் பால் மா விலையை அதிகரிப்பதற்கு நுகர்வோர் அதிகார சபை அனுமதி வழங்கியிருந்தது.
அதற்கமைய 400 கிராம் நிறையுடைய பால்மாவின் விலை இருபது ரூபாவாலும் ஒரு கிலோ கிராம் பால்மாவின் விலை ஐம்பது ரூபாவாலும் அதிகரிப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
0 Comments